என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அகஸ்தியர் அருவியில் வெள்ளப்பெருக்கு- பாபநாசம் கோவில் படித்துறை மூழ்கியது
Byமாலை மலர்30 Nov 2021 10:29 AM GMT (Updated: 30 Nov 2021 10:29 AM GMT)
வெள்ளப்பெருக்கு காரணமாக காரையார் சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு பக்தர்கள் செல்ல வனத்துறையினர் தொடர்ந்து தடை விதித்துள்ளனர்.
விக்கிரமசிங்கபுரம்:
தொடர் மழை காரணமாக நெல்லை மாவட்டம் பாபநாசம், காரையார், சேர்வலாறு அணைகள் நிரம்பும் தருவாயில் உள்ளது. இந்த நிலையில் அணைகளுக்கு நேற்று நீர்வரத்து அதிகரித்து உள்ளது. இதனால் அணை பாதுகாப்பு கருதி வினாடிக்கு 30 ஆயிரம் கனஅடி தண்ணீர் வரை திறக்கப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அகஸ்தியர் அருவியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேலும் பாபநாசம் கோவில் படித்துறை, கரையோரம் உள்ள பிள்ளையார் கோவில், சுவாமி மண்டபம் ஆகியவற்றில் வெள்ளநீர் புகுந்து ஓடுகிறது.
இதையடுத்து தாமிரபரணி ஆற்றில் குளிக்கவோ, அருகில் செல்லவோ மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. இதை விக்கிரமசிங்கபுரம் நகராட்சியினர் ஒலிப்பெருக்கி மூலமாக தெரிவித்து, பாபநாசம் தாமிரபரணி ஆற்றில் போலீசாருடன் இணைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
வெள்ளப்பெருக்கு காரணமாக காரையார் சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு பக்தர்கள் செல்ல வனத்துறையினர் தொடர்ந்து தடை விதித்துள்ளனர். இரவில் பாபநாசம் அணைக்கு நீர்வரத்து குறைந்ததையடுத்து அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டு உள்ளது.
தொடர் மழை காரணமாக நெல்லை மாவட்டம் பாபநாசம், காரையார், சேர்வலாறு அணைகள் நிரம்பும் தருவாயில் உள்ளது. இந்த நிலையில் அணைகளுக்கு நேற்று நீர்வரத்து அதிகரித்து உள்ளது. இதனால் அணை பாதுகாப்பு கருதி வினாடிக்கு 30 ஆயிரம் கனஅடி தண்ணீர் வரை திறக்கப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அகஸ்தியர் அருவியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேலும் பாபநாசம் கோவில் படித்துறை, கரையோரம் உள்ள பிள்ளையார் கோவில், சுவாமி மண்டபம் ஆகியவற்றில் வெள்ளநீர் புகுந்து ஓடுகிறது.
இதையடுத்து தாமிரபரணி ஆற்றில் குளிக்கவோ, அருகில் செல்லவோ மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. இதை விக்கிரமசிங்கபுரம் நகராட்சியினர் ஒலிப்பெருக்கி மூலமாக தெரிவித்து, பாபநாசம் தாமிரபரணி ஆற்றில் போலீசாருடன் இணைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
வெள்ளப்பெருக்கு காரணமாக காரையார் சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு பக்தர்கள் செல்ல வனத்துறையினர் தொடர்ந்து தடை விதித்துள்ளனர். இரவில் பாபநாசம் அணைக்கு நீர்வரத்து குறைந்ததையடுத்து அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டு உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X