என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருப்பூர் மாநகரில் மழையால் சாலைகள் சேதம் - வாகன ஓட்டிகள் அவதி
Byமாலை மலர்30 Nov 2021 9:54 AM GMT (Updated: 30 Nov 2021 9:54 AM GMT)
இன்று மதியம் 12 மணியளவில் திருப்பூர் மாநகரில் கருமேகங்கள் திரண்டு இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது.
திருப்பூர்:
திருப்பூர் மாநகர் பகுதியில் கடந்த 2 மாதங்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் சாலைகள் சேதமடைந்துள்ளன. இந்தநிலையில் இன்று காலை முதல் திருப்பூர் மாநகர் பகுதியில் காற்றுடன் பலத்த மழை பெய்தது.
இதன் காரணமாக தெருக்கள் மற்றும் மார்க்கெட்டுகள் மழைநீர் சூழ்ந்ததுடன், சகதிக்காடாக மாறின. இன்று மதியம் 12 மணியளவில் திருப்பூர் மாநகரில் கருமேகங்கள் திரண்டு இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது.
திருப்பூர் மாநகராட்சி 2-வது மண்டலத்திற்கு உட்பட்ட 16-வது வார்டு பிச்சம்பாளையம்புதூர் நால்ரோடு சந்திப்பு அருகே இருக்கும் ஆர் .கே .நகர் முதல் சாலை கடந்த வருடம் மாநகராட்சி சார்பில் போடப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வந்தது.
தற்போது ஒரு வாரம் பெய்த கனமழை காரணமாக புதிய தார் சாலை சேதமடைந்துவிட்டது. இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் சிரமமடைந்து வருகின்றனர். எனவே அதனை சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X