search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    காஷ்மீர் மாநில சிறப்புகள் பற்றிய கருத்தரங்கம்

    ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு, மக்களின் பண்பாடு, கலாச்சாரம், மொழிகள், சுற்றுசூழல், வேற்றுமையில் ஒற்றுமை என பல்வேறு கருத்துகளை பேசினர்.
    திருப்பூர்:

    காங்கயம் அரசு கல்லூரியில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சிறப்புகள் பற்றிய கருத்தரங்கம் நடந்தது. காங்கயம் அரசு கலை அறிவியல் கல்லூரி கணினி துறை, ஈ.பி.எஸ்.பி., கிளப் இணைந்து ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சிறப்புகள் பற்றிய கருத்தரங்கம் கல்லூரியில் நடந்தது. 

    கல்லூரி முதல்வர் நசீம்ஜான் தலைமை வகித்தார். கணினி துறை தலைவர் சீனிவாசன் வரவேற்றார். கணினி துறை உதவி பேராசிரியர் குருசாமி வாழ்த்துரை வழங்கினார். தமிழ்துறை உதவி பேராசிரியர் பன்னீர்செல்வம் சிறப்புரையாற்றினார். 

    இதில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு, மக்களின் பண்பாடு, கலாச்சாரம், மொழிகள், சுற்றுசூழல், வேற்றுமையில் ஒற்றுமை என பல்வேறு கருத்துகளை பேசினர். கல்லூரி, மாணவ மாணவிகள் பங்கேற்றனர். மாணவி கார்த்திகா நன்றி கூறினார்.
    Next Story
    ×