என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தஞ்சையில் பல்வேறு இடங்களில் திருடிய 12 பவுன் நகை-மோட்டார் சைக்கிள் பறிமுதல்: 2 பேர் கைது
Byமாலை மலர்27 Nov 2021 10:52 AM GMT (Updated: 27 Nov 2021 10:52 AM GMT)
தஞ்சையில் பல்வேறு இடங்களில் திருடிய 12 பவுன் நகை-மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தஞ்சாவூர்:
தஞ்சை அருகே விளார் சாலையில் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்கமல், போலீஸ்காரர்கள் முருகேசன், சிற்றரசு ஆகியோர் வாகன சோதனையில் ஈடுப்பட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2பேரை சந்தேகத்தின் பேரில் மறித்தனர். அவர்களிடம் இருந்த பையை சோதனை செய்ததில் அதில் நகைகள் இருந்தது. தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் தஞ்சை அருகே உள்ள காசாநாடு புதூரை சேர்ந்த பாலகுமார்(வயது 27) , பாரதி தாசன் நகரை சேர்ந்த கோகிலன்(24) ஆகியோர் என்பதும், அவர்களிடம் இருந்த நகைகள் தஞ்சை மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் கொள்ளையடித்தது என்பதும் தெரிய வந்தது. உடனே அவர்களை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 12 பவுன் நகைகளை பறிமுதல் செய்தனர். மேலும் அவர்கள் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர். அவர்கள் எங்கு கொள்ளையடித்தார்கள் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X