என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
பாளை அருகே ஆட்டோ டிரைவர் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.2 லட்சம் நகை கொள்ளை
நெல்லை:
பாளை வி.எம்.சத்திரத்தை அடுத்த கிருஷ்ணாபுரம் சாந்தம் நகர் 3-வது தெருவை சேர்ந்தவர் ராஜா சிங் (வயது 57), ஆட்டோ டிரைவர்.
சம்பவத்தன்று ராஜாசிங் குடும்பத்துடன் வீட்டைப் பூட்டிவிட்டு வெளியூர் சென்றுவிட்டார். நேற்று வீட்டுக்கு வந்தபோது, வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைந்து கிடந்தது. இதில் அதிர்ச்சி அடைந்த ராஜா சிங் உள்ளே சென்று பார்த்தார். அப்போது அங்கிருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 3½ பவுன் தங்க நகை, 400 கிராம் வெள்ளி, விலைஉயர்ந்த பொருட்கள் ஆகியவை திருட்டு போயிருந்தது. திருட்டுப் போன பொருட்களின் மொத்த மதிப்பு ரூ 2 லட்சம் ஆகும்
வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் இந்த துணிகர சம்பவத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
இதுகுறித்து ராஜா சிங் சிவந்திபட்டி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் மாரியப்பன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மர்ம நபர்களை தேடி வருகிறார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்