search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    திருப்பூரில் பள்ளி மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை

    சரண்சுதன் சைக்கிள் வாங்கி தருமாறு தாய் சுமதியிடம் அடிக்கடி கேட்டு வந்துள்ளான்.
    திருப்பூர்:

    திருப்பூர் குருவாயூரப்பன் நகர் முத்தண்ணம்பாளையம் பகுதியை சேர்ந்தவர்  செந்தில்குமார். இவரது மனைவி சுமதி (வயது 42). இவர்களது மகன் சரண்சுதன் (13). 8-ம்வகுப்பு மாணவன். 

    சுமதி கணவரை பிரிந்து மகனுடன் தனியாக வசித்து வந்தார். மேலும் பகுதி நேர ஆசிரியராகவும், மாலையில் பெட்ரோல் பங்க்கில் கணக்காளராகவும் பணியாற்றி வந்தார்.

    இந்தநிலையில் சரண்சுதன் சைக்கிள் வாங்கி தருமாறு தாய் சுமதியிடம் அடிக்கடி கேட்டு வந்துள்ளான். அவர் சம்பளம் வந்த பிறகு வாங்கி தருவதாக கூறியுள்ளார். நேற்று மாலையும் சரண்சுதன் சைக்கிள் கேட்டு அடம் பிடித்துள்ளார். 

    அதன்பிறகு சுமதி பெட்ரோல் பங்க்கிற்கு வேலைக்கு சென்று விட்டார். இரவு வீட்டிற்கு வந்து பார்த்த போது சரண்சுதன் வீட்டில் தூக்குப்போட்ட நிலையில் பிணமாக தொங்கினான். 

    அதிர்ச்சியடைந்த சுமதி மற்றும் அப்பகுதி பொதுமக்கள் மீட்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்த போது சரண்சுதன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    தாய் சைக்கிள் வாங்கி கொடுக்காததால் சரண்சுதன் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து நல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 
    Next Story
    ×