என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருப்பூரில் பள்ளி மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை
Byமாலை மலர்27 Nov 2021 9:10 AM GMT (Updated: 27 Nov 2021 9:12 AM GMT)
சரண்சுதன் சைக்கிள் வாங்கி தருமாறு தாய் சுமதியிடம் அடிக்கடி கேட்டு வந்துள்ளான்.
திருப்பூர்:
திருப்பூர் குருவாயூரப்பன் நகர் முத்தண்ணம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மனைவி சுமதி (வயது 42). இவர்களது மகன் சரண்சுதன் (13). 8-ம்வகுப்பு மாணவன்.
சுமதி கணவரை பிரிந்து மகனுடன் தனியாக வசித்து வந்தார். மேலும் பகுதி நேர ஆசிரியராகவும், மாலையில் பெட்ரோல் பங்க்கில் கணக்காளராகவும் பணியாற்றி வந்தார்.
இந்தநிலையில் சரண்சுதன் சைக்கிள் வாங்கி தருமாறு தாய் சுமதியிடம் அடிக்கடி கேட்டு வந்துள்ளான். அவர் சம்பளம் வந்த பிறகு வாங்கி தருவதாக கூறியுள்ளார். நேற்று மாலையும் சரண்சுதன் சைக்கிள் கேட்டு அடம் பிடித்துள்ளார்.
அதன்பிறகு சுமதி பெட்ரோல் பங்க்கிற்கு வேலைக்கு சென்று விட்டார். இரவு வீட்டிற்கு வந்து பார்த்த போது சரண்சுதன் வீட்டில் தூக்குப்போட்ட நிலையில் பிணமாக தொங்கினான்.
அதிர்ச்சியடைந்த சுமதி மற்றும் அப்பகுதி பொதுமக்கள் மீட்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்த போது சரண்சுதன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
தாய் சைக்கிள் வாங்கி கொடுக்காததால் சரண்சுதன் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து நல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X