என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பல்லடம் அருகே தொழில் நஷ்டத்தால் பனியன் நிறுவன உரிமையாளர் தற்கொலை
Byமாலை மலர்27 Nov 2021 9:07 AM GMT (Updated: 27 Nov 2021 9:07 AM GMT)
சம்பவ இடம் சென்ற போலீசார் உடலை கைப்பற்றி பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பல்லடம்:
பல்லடம் அருகே உள்ள குன்னாங்கல்பாளையம் பகுதியை சேர்ந்தவர் குமாரரத்தினதுரைசாமி (வயது52). இவர் அந்தப்பகுதியில் பனியன் நிறுவனம் நடத்தி வந்தார். இந்நிலையில் கடந்த 2 வருடங்களாக பனியன் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
இதனால் சரிவர தொழில் நடத்த முடியாமல் அவதிப்பட்டு வந்தார். நேற்று காலை வீட்டில் உள்ள அவரது அறை திறக்கப்படவில்லை. இதையடுத்து அவரது மனைவி சகுந்தலாமணி நீண்ட நேரம் கதவை தட்டியும் கதவு திறக்காததால் அருகே உள்ள ஜன்னல் வழியாக பார்த்தபோது மின்விசிறி மாட்டும் கம்பியில் குமாரரத்தின துரைசாமி, சேலையால் தூக்குபோட்ட நிலையில் தொங்கிக் கொண்டிருந்தார்.
இதையடுத்து பல்லடம் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடம் சென்ற போலீசார் உடலை கைப்பற்றி பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X