என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மாட்லாம்பட்டியில் பெண்ணிடம் 10 பவுன் தங்க சங்கிலி பறிக்க முயன்றவர் கைது
Byமாலை மலர்26 Nov 2021 8:51 AM GMT (Updated: 26 Nov 2021 8:51 AM GMT)
மாட்லாம்பட்டியில் பெண்ணிடம் 10 பவுன் தங்க சங்கிலி பறிக்க முயன்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காரிமங்கலம்:
காரிமங்கலம் அடுத்த மாட்லாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் வேலன். இவருடைய மனைவி அமுதா (வயது 40). இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டில் டி.வி. பார்த்து கொண்டிருந்தார். அப்போது வீட்டிற்குள் புகுந்த மர்மநபர் திடீரென அமுதா கழுத்தில் அணிந்திருந்த 10 பவுன் தங்க சங்கிலியை பறித்து கொண்டு தப்பி ஓட முயன்றார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அமுதா கூச்சலிட்டார். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து நகை பறித்து கொண்டு தப்பியோட முயன்ற நபரை மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்தனர். பின்னர் காரிமங்கலம் போலீசுக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் போலீசார் அங்கு சென்று அந்த நபரிடம் விசாரணை நடத்தினர். அதில் நகை பறிக்க முயன்றவர் அதே பகுதியை சேர்ந்த சண்முகம் (42) என்பது தெரியவந்தது. பொதுமக்கள் தாக்கியதில் காயம் அடைந்த அவரை போலீசார் மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்கு சேர்த்தனர். பின்னர் சண்முகத்தை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 10 பவுன் சங்கிலியை பறிமுதல் செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X