என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நல்லம்பள்ளி அருகே மாரியம்மன் கோவிலில் நகை, உண்டியல் பணம் திருட்டு
Byமாலை மலர்26 Nov 2021 8:45 AM GMT (Updated: 26 Nov 2021 8:45 AM GMT)
நல்லம்பள்ளி அருகே மாரியம்மன் கோவிலில் நகை, உண்டியல் பணம் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நல்லம்பள்ளி:
நல்லம்பள்ளி அருகே கந்துக்கால்பட்டி வன்னியர் தெருவில் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று முன்தினம் அம்மனுக்கு சிறப்பு பூஜையை நடத்தி விட்டு பூசாரி கோவிலை பூட்டி சென்றார்.
இந்த நிலையில் நேற்று காலை வழக்கம்போல் கோவிலை பூசாரி திறக்க வந்தபோது பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது அம்மன் கழுத்தில் கிடந்த தங்ககாசுகளுடன் கூடிய சுமார் 3 பவுன் தங்கத்தாலி மற்றும் உண்டியலுடன் 5 ஆண்டுகளாக திறக்கப்படாமல் இருந்த சுமார் ரூ.50 ஆயிரம் ஆகியவற்றை மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.
இதுகுறித்த தகவலின்பேரில் தொப்பூர் போலீசார் கோவிலுக்கு நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் மர்மநபர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர். மேலும் இந்த திருட்டு சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கோவிலில் திருடிய மர்மநபர்களை தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X