search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜெயக்குமார்
    X
    ஜெயக்குமார்

    ஜெயலலிதா இல்லம் தொண்டர்களுக்கு கோவில் போன்றது - ஜெயக்குமார்

    உண்மையான அதிமுக தொண்டர்கள் யாரும் கட்சி மாற மாட்டார்கள் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
    சென்னை:

    முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

    ஜெயலலிதா வாழ்ந்து மறைந்த வேதா இல்லம் அதிமுகவினருக்கு கோவிலாக இருந்து வருகிறது. கட்சியில் சில கருத்துப்பரிமாற்றம் இருக்கும் அதை பெரிதுபடுத்தி பேச வேண்டாம். 

    வேதா இல்ல விவகாரத்தில் மேல் நடவடிக்கை பற்றி தலைமை முடிவெடுக்கும். உண்மையான அதிமுக தொண்டர்கள் யாரும் கட்சி மாற மாட்டார்கள். வியாபாரிகள் தான் எந்த குளத்தில் தண்ணீர் இருக்கிறது என்பதை பார்த்து கட்சி மாறுவார்கள் என்றார்.


    Next Story
    ×