என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தல்
Byமாலை மலர்24 Nov 2021 9:43 AM GMT (Updated: 24 Nov 2021 9:43 AM GMT)
பணி பாதுகாப்பு இல்லாமல் ஒப்பந்த தொழிலாளர்கள்தான் அதிக அளவில் விபத்துக்குள்ளாகி வருகின்றனர்.
திருப்பூர்:
மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்களை பணிநிரந்தரம் செய்யக்கோரி திருப்பூர் சிக்கண்ணா கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம், மின்வாரிய தொழிலாளர் முன்னேற்ற சங்க செயலாளர் அ.சரவணன் உள்ளிட்ட நிர்வாகிகள் மனு அளித்தனர்.
அந்த மனுவில் கூறியுள்ளதாவது:
தமிழக மின்சார வாரியத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் 10 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றி வருகின்றனர். இதில் மின்பழுது நீக்கம், பராமரிப்பு, கண்காணிப்பு மற்றும் தெரு விளக்குகள் பராமரிப்பு ஆகிய பணிகளில் அதிக அளவில் ஒப்பந்தத் தொழிலாளர்கள்தான் பணியாற்றி வருகின்றனர்.
இத்தகை சூழ்நிலையில் பணி பாதுகாப்பு இல்லாமல் ஒப்பந்த தொழிலாளர்கள்தான் அதிக அளவில் விபத்துக்குள்ளாகி வருகின்றனர். தமிழக மின்சார வாரியத்தில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட களப்பணி காலியிடங்கள் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நிரப்பப்படாமல் உள்ளது. ஆகவே ஒப்பந்தத் தொழிலாளர்களை பணி நிரந்தம் செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X