என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நாட்டறம்பள்ளி அருகே பொதுமக்கள் சாலை மறியல்
Byமாலை மலர்23 Nov 2021 3:18 PM GMT (Updated: 23 Nov 2021 3:18 PM GMT)
நாட்டறம்பள்ளி அருகே பொதுமக்கள் வருவாய்த் துறை அதிகாரிகளை கண்டித்து திருப்பத்தூர்- நாட்டறம்பள்ளி சாலையில் கிழக்கு மேடு அருகே சாலையில் மரங்களை போட்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஜோலார்பேட்டை:
திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளியை அடுத்த கல்நார்சம்பட்டி ஊராட்சி கிழக்கு மேடு பகுதியில் கடந்த வாரம் பெய்த தொடர் கன மழையின் காரணமாக அப்பகுதியில் உள்ள குளங்கள் மற்றும் குட்டைகள் நிரம்பி மழைநீர் குடியிருப்பு பகுதிகளுக்குள் சென்றது. இதுகுறித்து தகவல் அறிந்த நாட்டறம்பள்ளி வருவாய் துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று தற்காலிகமாக பள்ளங்கள் எடுத்து மழைநீரை வெளியேற்றினர். அப்போது பொதுமக்கள் பயன்படுத்தி வந்த சாலை மற்றும் குடிநீர் குழாய் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
இதனை நேற்று வரை சரி செய்யவில்லை எனக் கூறி அப்பகுதி பொதுமக்கள் வருவாய்த் துறை அதிகாரிகளை கண்டித்து நேற்று திருப்பத்தூர்- நாட்டறம்பள்ளி சாலையில் கிழக்கு மேடு அருகே சாலையில் மரங்களை போட்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த நாட்டறம்பள்ளி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முனிரத்தினம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது போலீசார் அளித்த உறுதி மொழியை ஏற்று சாலை மறியலை பொதுமக்கள் கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X