என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
விழுப்புரம் மாவட்டத்தில் பெய்த கனமழையால் 20,644 ஹெக்டேர் விளைநிலங்கள் நீரில் மூழ்கின
Byமாலை மலர்23 Nov 2021 7:08 AM GMT (Updated: 23 Nov 2021 7:08 AM GMT)
அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த பயிர்களும் தண்ணீரில் மூழ்கியதால் விவசாயிகள் மிகவும் கவலையடைந்துள்ளனர்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்த கனமழையினால் ஆறுகளில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளம், அருகில் உள்ள குடியிருப்புகளை சூழ்ந்தது மட்டுமின்றி விவசாய விளைநிலங்களையும் மூழ்கடித்தது. அதுமட்டுமின்றி பல ஏரிகள் நிரம்பி அதிலிருந்து வெளியேறிய உபரிநீரும் விவசாய விளைநிலங்களுக்குள் புகுந்தது. இதனால் அங்கு சாகுபடி செய்யப்பட்டிருந்த பல ஏக்கர் பரப்பளவிலான விளைநிலங்கள் மூழ்கியது. ஒருசில நிலங்களில் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த பயிர்களும் தண்ணீரில் மூழ்கின. இதனால் விவசாயிகள் மிகவும் கவலையடைந்துள்ளனர்.
தற்போது ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் மாவட்டம் முழுவதும் நெல் பயிர் செய்யப்பட்டிருந்த 18,487 ஹெக்டேர் விளைநிலங்களும், சிறுதானியங்கள் பயிர் செய்திருந்த 61 ஹெக்டேர் விளைநிலங்களும், பருப்பு வகைகள் பயிர் செய்திருந்த 1,601 ஹெக்டேர் விளைநிலங்களும், பருத்தி பயிர் செய்திருந்த 41 ஹெக்டேர் விளைநிலங்களும், கரும்பு பயிர் செய்திருந்த 417 ஹெக்டேர் விளைநிலங்களும், எள் பயிர் செய்திருந்த 37 ஹெக்டேர் விளைநிலங்களும் என மொத்தம் 20,644 ஹெக்டேர் விளைநிலங்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன.
இதன் சேத விவரங்களை கணக்கிட்டு மதிப்பீடு நிர்ணயிக்கும் பணியில் வருவாய்த்துறையினரும் வேளாண் துறையினரும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்த கனமழையினால் ஆறுகளில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளம், அருகில் உள்ள குடியிருப்புகளை சூழ்ந்தது மட்டுமின்றி விவசாய விளைநிலங்களையும் மூழ்கடித்தது. அதுமட்டுமின்றி பல ஏரிகள் நிரம்பி அதிலிருந்து வெளியேறிய உபரிநீரும் விவசாய விளைநிலங்களுக்குள் புகுந்தது. இதனால் அங்கு சாகுபடி செய்யப்பட்டிருந்த பல ஏக்கர் பரப்பளவிலான விளைநிலங்கள் மூழ்கியது. ஒருசில நிலங்களில் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த பயிர்களும் தண்ணீரில் மூழ்கின. இதனால் விவசாயிகள் மிகவும் கவலையடைந்துள்ளனர்.
தற்போது ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் மாவட்டம் முழுவதும் நெல் பயிர் செய்யப்பட்டிருந்த 18,487 ஹெக்டேர் விளைநிலங்களும், சிறுதானியங்கள் பயிர் செய்திருந்த 61 ஹெக்டேர் விளைநிலங்களும், பருப்பு வகைகள் பயிர் செய்திருந்த 1,601 ஹெக்டேர் விளைநிலங்களும், பருத்தி பயிர் செய்திருந்த 41 ஹெக்டேர் விளைநிலங்களும், கரும்பு பயிர் செய்திருந்த 417 ஹெக்டேர் விளைநிலங்களும், எள் பயிர் செய்திருந்த 37 ஹெக்டேர் விளைநிலங்களும் என மொத்தம் 20,644 ஹெக்டேர் விளைநிலங்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன.
இதன் சேத விவரங்களை கணக்கிட்டு மதிப்பீடு நிர்ணயிக்கும் பணியில் வருவாய்த்துறையினரும் வேளாண் துறையினரும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X