search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    நாமக்கல் மாவட்டத்தில் மேலும் 40 பேருக்கு கொரோனா

    தமிழக சுகாதாரத்துறை அறிவிப்பின்படி முன்தினம் வரை நாமக்கல் மாவட்டத்தில் 52,966 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர்.
    நாமக்கல்:

    தமிழக சுகாதாரத்துறை அறிவிப்பின்படி நேற்று முன்தினம் வரை நாமக்கல் மாவட்டத்தில் 52,966 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். அதில் ஒருவரின் பெயர் பிற மாவட்ட பட்டியலில் இருந்து நாமக்கல் மாவட்ட பட்டியலுக்கு மாற்றப்பட்டது. இதனால் நாமக்கல் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 52,967 ஆக ஆனது. இந்த நிலையில் நேற்று மாவட்டத்தில் மேலும் 40 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டது பரிசோதனையில் தெரியவந்தது. இதனால் நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 53,007 ஆக உயர்ந்தது. நேற்று ஒரே நாளில் நாமக்கல் மாவட்டத்தில் 49 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பினர். இதனிடையே இதுவரை கொரோனாவுக்கு 504 பேர் பலியாகி உள்ள நிலையில், நேற்று திருச்செங்கோடு அடுத்த கூட்டப்பள்ளி அருகே உள்ள குடித்தூரை சேர்ந்த 62 வயது முதியவர் ஒருவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். அதனால் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 505 ஆக உயர்ந்தது. நாமக்கல் மாவட்டத்தில் 52,074 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். அதேபோல் 428 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    Next Story
    ×