search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பொக்லைன் எந்திரம் மூலம் தரைப்பாலத்தின் அடிப்பகுதியில் சிக்கியிருந்த முட்புதர்கள் அகற்றப்பட்டதை படத்தில் காணலா
    X
    பொக்லைன் எந்திரம் மூலம் தரைப்பாலத்தின் அடிப்பகுதியில் சிக்கியிருந்த முட்புதர்கள் அகற்றப்பட்டதை படத்தில் காணலா

    மங்கலம் அக்ரஹாரப்புத்தூர் தரைப்பாலத்தின் கீழ் சிக்கிய ஆகாயத்தாமரைகள் அகற்றம்

    தரைப்பாலத்தின் கீழ் அடைப்பு ஏற்பட்டு நொய்யல் நீர் தரைப்பாலத்திற்கு மேல் சென்றது.
    மங்கலம்:

    திருப்பூர் மாவட்டம் மங்கலம் ஊராட்சி அக்ரஹாரப்புத்தூர் பகுதியில் இருந்து வடுகன்காளிபாளையம் செல்லும் வழியில் நொய்யல் ஆற்றின் குறுக்கே தரைப்பாலம் உள்ளது. தற்போது நொய்யலில் வெள்ளம் சென்று கொண்டிருக்கிறது.

    இந்தநிலையில் நொய்யலில் அடித்து வரப்படும் செடி கொடிகள், ஆகாயத்தாமரைகள், முட்செடிகள், போன்றவையால் தரைப்பாலத்தின் கீழ் அடைப்பு ஏற்பட்டு நொய்யல் நீர் தரைப்பாலத்திற்கு மேல் சென்றது. இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டனர். 

    இதுகுறித்து அக்ரஹாரப்புத்தூர் பகுதி பொதுமக்கள் மங்கலம் ஊராட்சி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து மங்கலம் ஊராட்சி மன்றத்தலைவர் எஸ்.எம்.பி.மூர்த்தி சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டார். பின்னர் பொக்லைன் எந்திரம் மூலம் தரைப்பாலத்தின் அடிப்பகுதியில் சிக்கி இருந்த ஆகாயத்தாமரை, செடி கொடிகள், முட்செடிகள் போன்றவை அகற்றப்பட்டது.
    Next Story
    ×