search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்.
    X
    கோப்புபடம்.

    ஊத்துக்குளி பகுதியில் வளர்ச்சி பணிகளை கலெக்டர் ஆய்வு

    குன்னத்தூர் பேரூராட்சி ஒளி விளக்கு நகரில் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் மூலம் தலா ரூ.2.10 லட்சம் மானியத்தில் கட்டப்பட்டு வரும் 16 வீடுகளை கலெக்டர் பார்வையிட்டார்.
    ஊத்துக்குளி:

    திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் ரூ.46.69 லட்சம் மதிப்பீட்டில் முடிவுற்ற வளர்ச்சி திட்டப் பணிகளை கலெக்டர் வினீத்  ஆய்வு செய்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    திருப்பூர் மாவட்டத்தில் 2021-22 ம் ஆண்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின்கீழ் கருமஞ்சரை ஊராட்சியில் ரூ.5.36 லட்சம் மதிப்பீட்டில் நீர் வரத்து கால்வாயில் அமைக்கப்பட்டுள்ள புதிய பண்ணைக்குட்டை, அத்திப்பட்டி காலனியில் ரூ.5.31 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சிறு பாலம், காவுத்தம்பாளையத்தில் ரூ.9.79 லட்சம் மதிப்பீட்டில் அரசு ஆரம்பப் பள்ளியில் கட்டப்பட்டுள்ள சுற்றுச் சுவர், செங்காளிபாளையம் ஊராட்சியில் ரூ.13.07 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டி உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது என்றார்.

    இதைத்தொடர்ந்து குன்னத்தூர் பேரூராட்சி ஒளி விளக்கு நகரில் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் மூலம் தலா ரூ.2.10 லட்சம் மானியத்தில் கட்டப்பட்டு வரும் 16 வீடுகளை பார்வையிட்டார். 

    ஆய்வின்போது ஊத்துக்குளி வட்டார வளர்ச்சி அலுவலர்ஜோதிநாத், குன்னத்தூர் செயல் அலுவலர் ரேணுகா, உதவி செயற் பொறியாளர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர். 
    Next Story
    ×