என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வாட்ஸ்அப் வீடியோவில் ஆபாசமாக தோன்றி பணம் கேட்டு மிரட்டும் பெண்
Byமாலை மலர்18 Nov 2021 7:32 AM GMT (Updated: 18 Nov 2021 7:32 AM GMT)
சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்த வாலிபரை மிரட்டி பணம் பறித்த பெண்ணும், வாலிபரும் குஜராத்தில் இருந்து கொண்டு நூதன முறையில் பணம் பறித்தது சைபர்கிரைம் போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
சென்னை:
சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த வாலிபர் ஒருவருக்கு முகநூல் மெசஞ்சரில் பெண் ஒருவர் “ஹாய்” என்று தகவல் அனுப்பி உள்ளார்.
மேலும் அந்த பெண் தனது வாட்ஸ்அப் எண்ணையும் கொடுத்து அதில் வீடியோ காலில் தொடர்பு கொண்டால் என்னுடன் பேசலாம் என்று கூறி இருக்கிறார்.
இதையடுத்து அந்த வாலிபர் பெண்ணுக்கு வாட்ஸ்அப் வீடியோ கால் செய்துள்ளார். அப்போது எதிர்முனையில் குறிப்பிட்ட பெண் அரைகுறை ஆடையோடு காட்சியளித்து இருக்கிறார். இதனை வில்லிவாக்கம் வாலிபரும் ரசித்து பார்த்துள்ளார்.
இந்த நிலையில் திடீரென செல்போன் எண் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதன் பிறகு சிறிது நேரத்தில் வாலிபரின் செல்போனுக்கு “ஸ்கிரீன்சாட்” போட்டோக்கள் வந்துள்ளன.
அதில் இளம்பெண்ணை வாலிபர் ரசித்து பார்க்கும் புகைப்படங்கள் இருந்துள்ளன. அப்போது பேசிய பெண்ணும் ஆணும் வாலிபரிடம் பணம் கேட்டு மிரட்டி உள்ளனர். ரூ. 50 ஆயிரத்தை உடனே அனுப்ப வேண்டும். இல்லை நீங்கள் பெண்ணை ஆபாசமாக ரசித்த காட்சிகளை சமூக வலைதளங்களில் வெளியிடுவோம் என்று கூறி மிரட்டி உள்ளனர்.
எனவே பயந்துபோன அந்த வாலிபர் ரூ.50 ஆயிரம் பணத்தை அவர்களது வங்கி கணக்குக்கு அனுப்பி உள்ளார்.
இதன் பிறகு மீண்டும் பணம் கேட்டு அந்த பெண்ணுடன் இருந்த வாலிபர் மிரட்டல் விடுத்து இருக்கிறார். இதையடுத்து இது தொடர்பாக வில்லிவாக்கத்தைச் சேர்ந்த வாலிபர் சைபர்கிரைம் போலீசில் புகார் செய்துள்ளார்.
இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மிரட்டி பணம் பறித்த பெண்ணும், வாலிபரும் குஜராத்தில் இருந்து கொண்டு நூதன முறையில் பணம் பறித்தது தெரிய வந்துள்ளது.
எனவே இளைஞர்கள் சபல புத்தியோடு தேவையில்லாமல் வரும் இது போன்ற அழைப்புகளை ஏற்றுக்கொள்ளக்கூடாது எனவும், தேவையில்லாமல் வரும் குறுஞ்செய்திகளை நம்பி யாரையும் தொடர்பு கொண்டு பேசக்கூடாது எனவும் இதுபோன்ற அழைப்புகள் வரும்போது மிகவும் உஷாராக இருக்க வேண்டும் என்றும் சைபர்கிரைம் போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.
சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த வாலிபர் ஒருவருக்கு முகநூல் மெசஞ்சரில் பெண் ஒருவர் “ஹாய்” என்று தகவல் அனுப்பி உள்ளார்.
மேலும் அந்த பெண் தனது வாட்ஸ்அப் எண்ணையும் கொடுத்து அதில் வீடியோ காலில் தொடர்பு கொண்டால் என்னுடன் பேசலாம் என்று கூறி இருக்கிறார்.
இதையடுத்து அந்த வாலிபர் பெண்ணுக்கு வாட்ஸ்அப் வீடியோ கால் செய்துள்ளார். அப்போது எதிர்முனையில் குறிப்பிட்ட பெண் அரைகுறை ஆடையோடு காட்சியளித்து இருக்கிறார். இதனை வில்லிவாக்கம் வாலிபரும் ரசித்து பார்த்துள்ளார்.
இந்த நிலையில் திடீரென செல்போன் எண் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதன் பிறகு சிறிது நேரத்தில் வாலிபரின் செல்போனுக்கு “ஸ்கிரீன்சாட்” போட்டோக்கள் வந்துள்ளன.
அதில் இளம்பெண்ணை வாலிபர் ரசித்து பார்க்கும் புகைப்படங்கள் இருந்துள்ளன. அப்போது பேசிய பெண்ணும் ஆணும் வாலிபரிடம் பணம் கேட்டு மிரட்டி உள்ளனர். ரூ. 50 ஆயிரத்தை உடனே அனுப்ப வேண்டும். இல்லை நீங்கள் பெண்ணை ஆபாசமாக ரசித்த காட்சிகளை சமூக வலைதளங்களில் வெளியிடுவோம் என்று கூறி மிரட்டி உள்ளனர்.
எனவே பயந்துபோன அந்த வாலிபர் ரூ.50 ஆயிரம் பணத்தை அவர்களது வங்கி கணக்குக்கு அனுப்பி உள்ளார்.
இதன் பிறகு மீண்டும் பணம் கேட்டு அந்த பெண்ணுடன் இருந்த வாலிபர் மிரட்டல் விடுத்து இருக்கிறார். இதையடுத்து இது தொடர்பாக வில்லிவாக்கத்தைச் சேர்ந்த வாலிபர் சைபர்கிரைம் போலீசில் புகார் செய்துள்ளார்.
இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மிரட்டி பணம் பறித்த பெண்ணும், வாலிபரும் குஜராத்தில் இருந்து கொண்டு நூதன முறையில் பணம் பறித்தது தெரிய வந்துள்ளது.
எனவே இளைஞர்கள் சபல புத்தியோடு தேவையில்லாமல் வரும் இது போன்ற அழைப்புகளை ஏற்றுக்கொள்ளக்கூடாது எனவும், தேவையில்லாமல் வரும் குறுஞ்செய்திகளை நம்பி யாரையும் தொடர்பு கொண்டு பேசக்கூடாது எனவும் இதுபோன்ற அழைப்புகள் வரும்போது மிகவும் உஷாராக இருக்க வேண்டும் என்றும் சைபர்கிரைம் போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X