search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "chennai youth"

    • என்னை மிரட்டி என்னிடம் இருந்து பல்வேறு கால கட்டங்களில் ரூ. 10 லட்சம் மதிப்பிலான நகை மற்றும் பணத்தை பெற்று உள்ளார். தற்போது அவர் என்னை திருமணம் செய்ய மறுக்கிறார்.
    • எனவே என்னை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்து பணம் மற்றும் நகைகளை பெற்று ஏமாற்றி சங்கர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கோவை:

    கோவை சவுரிபாளையம் பிரிவு பகுதியை சேர்ந்தவர் 25 வயது இளம்பெண். இவர் கிழக்கு அனைத்து மகளிர் போலீசில் ஒரு புகார் அளித்தார்.

    எனக்கும், எனது கணவருக்கும் கடந்த 4 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. எங்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

    எனது கணவர் கட்டுமான பொருட்கள் விற்பனை செய்யும் கடை வைத்து நடத்தி வருகிறார். நானும் எனது கணவருடன் சேர்ந்து தொழில் செய்து வந்தேன்.

    எங்களது கடைக்கு சென்னையை சேர்ந்தவரும் தற்போது கோவையில் தங்கி இருந்து கட்டுமான பொருட்கள் விற்பனை செய்யும் எனது கணவரின் நண்பர் சங்கர் (வயது 35) என்பவர் அடிக்கடி வந்து சென்றார்.

    அப்போது எனக்கும, சங்கருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. எனது கணவர் இல்லாத நேரத்தில் கடைக்கு வரும் அவர் என்னுடன் நட்பாக பழகினார்.

    ஒருநாள் என்னை ஒரு நட்சத்திர ஓட்டலுக்கு அழைத்து சென்றார். அங்கு வைத்து நாங்கள் ஒன்றாக சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டோம். அதன் பின்னர் இந்த புகைப்படத்தை எனது கணவரிடம் காண்பித்து விடுவேன் என என்னை மிரட்டினார்.

    மேலும் ஒன்றாக எடுத்துக்கொண்ட புகைப்படத்தை காண்பித்து மீண்டும் ஓட்டலுக்கு வருமாறு என்னை வற்புறுத்தினார். ஓட்டலில் என்னை மிரட்டி வலுக்கட்டாயமாக கற்பழித்தார். மேலும் உல்லாசமாக இருப்பதை எனக்கு தெரியாமல் செல்போனில் வீடியோ எடுத்துக்கொண்டார்.

    பின்னர் உனது கணவரை விவாகரத்து செய்து விடு, நான் உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என கூறினார். இதனை நம்பிய நான் எனது கணவரிடம் விவாகரத்து கேட்டு வழக்கு தொடர்ந்தேன். தற்போது இந்த வழக்கு நிலுவையில் உள்ளது.

    மேலும் சங்கர் தொடர்ந்து என்னிடம் திருமணம் செய்வதாக உறுதியளித்து பலமுறை என்னை பாலியல் பலாத்காரம் செய்தார். நான் வர மறுத்தால் ஒன்றாக இருக்கும் ஆபாச வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு விடுவதாக மிரட்டி வருகிறார்.

    என்னை மிரட்டி என்னிடம் இருந்து பல்வேறு கால கட்டங்களில் ரூ. 10 லட்சம் மதிப்பிலான நகை மற்றும் பணத்தை பெற்று உள்ளார். தற்போது அவர் என்னை திருமணம் செய்ய மறுக்கிறார். எனவே என்னை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்து பணம் மற்றும் நகைகளை பெற்று ஏமாற்றி சங்கர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த புகாரில் கூறியிருந்தார்.

    புகாரின் பேரில் இளம்பெண்ணை ஏமாற்றி ஆபாச வீடியோ எடுத்து பாலியல் பலாத்காரம் செய்து நகை மற்றும் பணத்தை பெற்று ஏமாற்றிய சங்கர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்த வாலிபரை மிரட்டி பணம் பறித்த பெண்ணும், வாலிபரும் குஜராத்தில் இருந்து கொண்டு நூதன முறையில் பணம் பறித்தது சைபர்கிரைம் போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
    சென்னை:

    சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த வாலிபர் ஒருவருக்கு முகநூல் மெசஞ்சரில் பெண் ஒருவர் “ஹாய்” என்று தகவல் அனுப்பி உள்ளார்.

    மேலும் அந்த பெண் தனது வாட்ஸ்அப் எண்ணையும் கொடுத்து அதில் வீடியோ காலில் தொடர்பு கொண்டால் என்னுடன் பேசலாம் என்று கூறி இருக்கிறார்.

    இதையடுத்து அந்த வாலிபர் பெண்ணுக்கு வாட்ஸ்அப் வீடியோ கால் செய்துள்ளார். அப்போது எதிர்முனையில் குறிப்பிட்ட பெண் அரைகுறை ஆடையோடு காட்சியளித்து இருக்கிறார். இதனை வில்லிவாக்கம் வாலிபரும் ரசித்து பார்த்துள்ளார்.

    இந்த நிலையில் திடீரென செல்போன் எண் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதன் பிறகு சிறிது நேரத்தில் வாலிபரின் செல்போனுக்கு “ஸ்கிரீன்சாட்” போட்டோக்கள் வந்துள்ளன.

    அதில் இளம்பெண்ணை வாலிபர் ரசித்து பார்க்கும் புகைப்படங்கள் இருந்துள்ளன. அப்போது பேசிய பெண்ணும் ஆணும் வாலிபரிடம் பணம் கேட்டு மிரட்டி உள்ளனர். ரூ. 50 ஆயிரத்தை உடனே அனுப்ப வேண்டும். இல்லை நீங்கள் பெண்ணை ஆபாசமாக ரசித்த காட்சிகளை சமூக வலைதளங்களில் வெளியிடுவோம் என்று கூறி மிரட்டி உள்ளனர்.

    எனவே பயந்துபோன அந்த வாலிபர் ரூ.50 ஆயிரம் பணத்தை அவர்களது வங்கி கணக்குக்கு அனுப்பி உள்ளார்.

    இதன் பிறகு மீண்டும் பணம் கேட்டு அந்த பெண்ணுடன் இருந்த வாலிபர் மிரட்டல் விடுத்து இருக்கிறார். இதையடுத்து இது தொடர்பாக வில்லிவாக்கத்தைச் சேர்ந்த வாலிபர் சைபர்கிரைம் போலீசில் புகார் செய்துள்ளார்.

    இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மிரட்டி பணம் பறித்த பெண்ணும், வாலிபரும் குஜராத்தில் இருந்து கொண்டு நூதன முறையில் பணம் பறித்தது தெரிய வந்துள்ளது.

    எனவே இளைஞர்கள் சபல புத்தியோடு தேவையில்லாமல் வரும் இது போன்ற அழைப்புகளை ஏற்றுக்கொள்ளக்கூடாது எனவும், தேவையில்லாமல் வரும் குறுஞ்செய்திகளை நம்பி யாரையும் தொடர்பு கொண்டு பேசக்கூடாது எனவும் இதுபோன்ற அழைப்புகள் வரும்போது மிகவும் உஷாராக இருக்க வேண்டும் என்றும் சைபர்கிரைம் போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.
    நாகர்கோவிலுக்கு கள்ளக்காதலியை பார்க்க வந்த சென்னை வாலிபர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    நாகர்கோவில்:

    நாகர்கோவில் வடசேரி பகுதியில் நேற்று ஒரு வாலிபர் வாயில் நுரை தள்ளியபடி மயங்கி கிடந்தார்.

    உயிருக்கு போராடிக்கொண்டிருந்த அந்த வாலிபரை அக்கம் பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்சு மூலம் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இச்சம்பவம் பற்றி வடசேரி போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெறும் வாலிபரிடமும் விசாரித்தனர்.

    இதில், அந்த வாலிபர் சென்னை ஆவடியை அடுத்த திருமுல்லைவாயல் பகுதியைச் சேர்ந்த முருகன் (வயது 35) என தெரிய வந்தது. முருகனுக்கு திருமணமாகி குழந்தைகளும் உள்ளனர்.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவர்களின் வீடு அருகே நாகர்கோவிலைச் சேர்ந்த தம்பதி வாடகைக்கு தங்கியிருந்தனர். அந்த தம்பதியுடன் முருகனுக்கு பழக்கம் ஏற்பட்டது.

    நாளடைவில் முருகன் நாகர்கோவில் பெண்ணுடன் நெருங்கி பழகினார். அடிக்கடி அவர்கள் தனியாக சந்தித்து பேசினர். இந்த பழக்கம் கள்ளக்காதலாக மாறியது.

    இந்த நிலையில் அந்த தம்பதி திடீரென சென்னை வீட்டை காலி செய்து விட்டு மீண்டும் நாகர்கோவில் சென்று விட்டனர். இது முருகனுக்கு மனவருத்தத்தை ஏற்படுத்தியது. அவர், சென்னையில் இருந்து கள்ளக்காதலியை செல்போனில் தொடர்பு கொண்டார். ஆனால் அவர், செல்போன் அழைப்பை ஏற்கவில்லை.

    இதனால் மனம் உடைந்த முருகன் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கள்ளக்காதலியை தேடி நாகர்கோவில் வந்தார். வடசேரி பகுதியில் உள்ள ஒரு லாட்ஜில் அறை எடுத்து தங்கினார். நேற்று கள்ளக்காதலி வசிக்கும் பகுதிக்கு சென்று அவரது வீட்டை கண்டுபிடித்தார்.

    வீட்டிற்குள் செல்ல முயன்ற போது அந்த பெண் அவரை சந்திக்க மறுத்து வெளியே திருப்பி அனுப்பினார். மீண்டும் இங்கு வரக்கூடாது எனவும் எச்சரித்தார். இதன் காரணமாகவே முருகன் வி‌ஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.

    முருகன் தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுபற்றி வடசேரி போலீசார் சென்னை திருமுல்லைவாயல் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அவர்கள் மூலம் முருகனின் குடும்பத்தினரை தொடர்பு கொண்டு விவரங்களை தெரிவிக்கவும் கேட்டுக் கொண்டனர்.

    முருகனின் உறவினர்கள் வந்த பின்பே அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்க வடசேரி போலீசார் முடிவு செய்துள்ளனர். #tamilnews
    சித்தூர் அருகே இரட்டை கொலை வழக்கில் சென்னையை சேர்ந்த 5 பேர் சித்தூர் போலீஸ் நிலையத்தில் சரணடைந்தனர்.
    சித்தூர்:

    கடந்த 10-ந் தேதி சித்தூர் குடிபாலா, நரஹரிபேட்டை செக்போஸ்ட் அருகே அடையாளம் தெரியாத 2 வாலிபர்கள் கொலை செய்யப்பட்டு கிடந்தனர்.

    இது குறித்து, குடிபாலா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    அவர்களில் ஒருவர் சென்னை கே.கே.நகரை சேர்ந்த அசோக்குமார் என்றும், மற்றொருவர் குன்றத்தூரை சேர்ந்த கோபி என தெரிந்தது.

    இது குறித்து, 3 தனிப்படை போலீசார் குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்த நிலையில் கசித்தூர் போலீஸ் நிலையத்தில் 5 பேர் சரண் அடைந்தனர்.

    விசாரணையில், அவர்கள் சென்னை கே.கே.நகர் அம்பேத்கர் நகரை சேர்ந்த ரமேஷ் (எ) குட்டி (வயது 35), தாம்பரத்தை சேர்ந்த கார்த்திக் (23), குன்றத்தூரை சேர்ந்த குழந்தைவேல் (23), சிவா (26), நந்தம்பாக்கம் சுமேஷ் (32) என்பது தெரியவந்தது.

    சென்னை கே.கே.நகரை சேர்ந்தவர் சீசிங் ராஜா, கட்டப்பஞ்சாயத்து, கொலை, கொள்ளை, ஆள்கடத்தல் போன்ற சம்பவங்களில் தொடர்புடையவர். இவருக்கும் அசோக்குமாருக்கு நட்பு ஏற்பட்டு, இருவரும் சேர்ந்து பல்வேறு குற்றசெயல்களில் ஈடுபட்டு வந்தனர்.

    இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரச்சனைக்குரிய நிலம் ஒன்று அசோக்குமாரிடம் விற்பனைக்கு வந்தது. அவர் சீசிங் ராஜாவிற்கு தெரிவித்து, இருவரும் சேர்ந்து ரூ.3 கோடிக்கு அந்த நிலத்தை வாங்கி உள்ளனர். பின்னர், அந்த நிலத்தை அசோக்குமார் கடந்த மாதம் ரூ.10 கோடிக்கு வேறு ஒருவருக்கு விற்றுள்ளார். சீசிங் ராஜாவுக்கு பங்கு தொகை வழங்காமல் ஏமாற்றி உள்ளார்.

    இதனால், அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சீசிங் ராஜா, அசோக்குமாரை கொலை செய்யதிட்டமிட்டார்.

    கடந்த 9-ந் தேதி அசோக்குமார், சீசிங் ராஜா, அசோக்குமாரின் நண்பர் கோபி உட்பட 7 பேர் ஒரு கொலை வழக்கில் திருவள்ளூர் கோர்ட்டுக்கு சென்றனர். பின்னர், அனைவரும் சேர்ந்து மது குடித்தனர். இரவு 11 மணியளவில் ஆந்திர மாநில எல்லைப்பகுதிக்கு வந்த அவர்கள் அசோக்குமாரிடம் பணம் தருமாறு கேட்டுள்ளனர்.

    அதற்கு அவர் மறுத்துள்ளார். இதனால், அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதைப்பார்த்த அசோக்குமாரின் நண்பர் கோபி, சீசிங் ராஜாவிடம் தட்டிக்கேட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த அந்த கும்பல் அவர்கள் இருவரையும் சரமாரியாக வெட்டி கொலை செய்தது.

    சீசிங் ராஜா மீது சென்னையில் உள்ள பல்வேறு போலீஸ் நிலையங்களில் 40க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது, அவர் தான் செய்த குற்றங்களை மறைக்க போலியான ஆட்களை சரணடைய வைத்து தப்பி வருவதும் தெரியவந்தது.

    முக்கிய குற்றவாளியான சீசிங் ராஜாவை கைது செய்ததால் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவரும்.

    இந்த வழக்கை விசாரிப்பதற்காக சென்னை சென்ற ஆந்திரா போலீசாரை தமிழக போலீசார் அலைக்கழித்துள்ளனர்.

    சீசிங் ராஜா குறித்து விசாரித்த போது அதற்கு போலீசார் சரியாக பதில் அளிக்காமல் தட்டி கழித்துள்ளனர். தலைமறைவாக உள்ள சீசிங் ராஜாவை பிடிக்க முயன்ற போது, அவர் சில போலீசாரின் உதவியால் தப்பி செல்வது தெரியவந்தது என சித்தூர் குற்றவியல் டி.எஸ்.பி. ராமகிருஷ்ணா குற்றம் சாட்டியுள்ளார்.#tamilnews
    ×