என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mumbai woman"

    • மும்பையை சேர்ந்த பெண் ஒருவர் தொழில் துறையில் நிபுணராக உள்ளார்.
    • உன் இடுப்பை காட்டு நான் உனக்கு ரூ.5 ஆயிரம் தருகிறேன் என்று வாலிபர் கூறினார்.

    மும்பை:

    மும்பையை சேர்ந்த பெண் ஒருவர் தொழில் துறையில் நிபுணராக உள்ளார். சென்னையை சேர்ந்த வாலிபர் ஒருவர் இரவில் வேலை வாய்ப்பு தொடர்பாக அவரை தொடர்பு கொண்டார். ஆனால் பேச்சுவார்த்தை நீடித்ததில் அவர் எதற்காக இந்த நேரத்தில் தொடர்பு கொண்டார் என்பதை அந்த பெண் புரிந்து கொண்டார். அதற்கேற்றார்போல்தான் அந்த வாலிபரும் பேசினார். அப்போது அந்த வாலிபர் திடீரென அவரிடம் உன் இடுப்பை காட்டு நான் உனக்கு ரூ.5 ஆயிரம் தருகிறேன் என்று கூறினார்.

    முதலில் அந்த வாலிபர் வேலை தேடுவது போல் தனது பயோ டேட்டா விவரங்களை எல்லாம் அதில் பதிவு செய்துள்ளார். பெண்கள் இதேபோல் சபல வாலிபர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று அந்த பெண் கூறியுள்ளார்.

    பின்னர் அந்த பெண் உரையாடல் பதிவுகளை ஸ்கிரீன்ஷாட்டாக வெளியிட்டார். அப்போது அந்த வாலிபர் நான் மது குடித்து இருந்ததாகவும் இதனால் உணர்ச்சிவசப்பட்டு பேசியதாகவும் அந்த பெண்ணிடம் மன்னிப்பு கோரினார்.

    • செம்பூரில் உள்ள நகைக்கடைஇன்ஸ்டாகிராமில் பகிர்ந்த வீடியோ தற்போது வைரலாகி உள்ளது.
    • வீடியோவில், சல்தான்ஹா தனது நாய் டைகருக்கு சங்கிலியை தேர்ந்தெடுப்பதை காணலாம்.

    மும்பையைச் சேர்ந்த சரிதா சல்தான்ஹா என்ற பெண், தனது நாய்க்கு ரூ.2.5 லட்சம் மதிப்புள்ள தங்க சங்கிலியை பரிசாக அளித்து சமூக வலைதளங்களில் கவனத்தை ஈர்த்துள்ளார். அந்த வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி உள்ளது.

    மும்பையை சேர்ந்த சரிதா சல்தான்ஹா என்ற பெண், தனது வளர்ப்பு நாயான டைகரின் பிறந்தநாளைக் கொண்டாடுவதற்காக ஷாப்பிங் சென்றுள்ளார். அங்கு தனது நாய்க்கு நகையை தேர்ந்தெடுத்து அணிகிறார்.

    செம்பூரில் உள்ள நகைக்கடை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த வீடியோ தற்போது வைரலாகி உள்ளது. வீடியோவில், சல்தான்ஹா தனது நாய் டைகருக்கு சங்கிலியை தேர்ந்தெடுப்பதை காணலாம்.

    சரிதா சல்தான்ஹா தனது கழுத்தில் சங்கிலியை போடும்போது, உற்சாகமான மகிழ்ச்சியுடன் வாலை ஆட்டுவதுடன் வீடியோ முடிகிறது. இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி உள்ளது.


    போன ஜென்மத்தில் சகோதரிகளாக இருந்தோம் எனக்கூறி இளம்பெண்ணை கடத்த முயன்ற பெண் மற்றும் போலீஸ் கான்ஸ்டபிளை மத்தியப்பிரதேச போலீசார் கைது செய்துள்ளனர்.
    போபால்:

    மத்தியப்பிரதேசத்தை சேர்ந்த ஷிவானி என்ற பெண், தனது தாய் சிகிச்சைக்காக மும்பையில் உள்ள டாட்டா மருத்துவமனையில் சில வாரங்கள் இருந்துள்ளார். அப்போது, 40 வயதான கிரண் என்ற பெண் அறிமுகமாகியுள்ளார். இருவருக்கும் இடையே நட்பு மலரவே போன் நம்பர்களை பறிமாற்றம் செய்து பேசும் அளவுக்கு இருந்துள்ளனர்.

    இந்நிலையில், சமீபத்தில் மத்தியப்பிரதேசம் மாநிலம் இந்தூர் வந்த கிரண் போன ஜென்மத்தில் நாம் இருவரும் சகோதரியாக இருந்தோம் எனக்கூறி ஷிவானியை வீட்டில் இருந்து வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்ல முயன்றுள்ளார். இதனை அடுத்து, ஷிவானி குடும்பத்தினர் போலீசில் புகாரளித்தனர்.

    புகாரின் அடிப்படையில் கிரண் மற்றும் அவருடன் வந்த பைகுலா போலீஸ் நிலைய காவலர் ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். 
    ×