என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அத்திக்கடவு, அவிநாசி திட்டப் பணிகள் 87 சதவீதம் நிறைவு - அதிகாரி தகவல்
Byமாலை மலர்15 Nov 2021 11:07 AM GMT (Updated: 15 Nov 2021 11:07 AM GMT)
மொத்தம் 1,058 கி.மீ., நிலத்தடியில் குழாய் பதிக்கும் பணி நடந்து வருகிறது. இதில் 261 கி.மீ.,க்கு இரும்பு குழாய் பதிக்கப்பட உள்ள நிலையில் இதுவரை 217 கி.மீ.,க்கு பதிக்கப்பட்டுள்ளது.
அவிநாசி:
கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களை உள்ளடக்கி ரூ.1,652 கோடி செலவில் அத்திக்கடவு -அவிநாசி நீர் செறிவூட்டும் திட்டப்பணி நடந்து வருகிறது. மொத்தம் 1,045 குளம், குட்டைகள், 24 ஆயிரத்து 468 ஏக்கர் பரப்பிலான விவசாய நிலங்கள் பயன் பெறும் வகையில் திட்டம் வடிவமைக்கப்பட்டு பணி மேற்கொள்ளப்படுகிறது.
பவானி, நல்லகவுண்டம்பாளையம், திருவாச்சி, போலநாயக்கன்பாளையம், எம்மாம்பூண்டி, அன்னூர் ஆகிய இடங்களில் நீரேற்று நிலைய கட்டுமானப்பணி முழுமை பெற்றுள்ளது. மேலும் அனைத்து நீரேற்று நிலையங்களிலும் டிரான்ஸ்பார்மர் பொருத்தும் பணி நிறைவு பெற்றுள்ளது.
மொத்தம் 1,058 கி.மீ., நிலத்தடியில் குழாய் பதிக்கும் பணி நடந்து வருகிறது. இதில் 261 கி.மீ.,க்கு இரும்பு குழாய் பதிக்கப்பட உள்ள நிலையில் இதுவரை 217 கி.மீ.,க்கு பதிக்கப்பட்டுள்ளது. 798 கி.மீ.,க்கு உயர் அடர்த்தி பாலியுரேத்தின் குழாய் பதிக்கப்பட வேண்டிய நிலையில் இதுவரை 642 கி.மீ.,க்கு பதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து திட்ட கண்காணிப்பு பொறியாளர் சிவலிங்கம் கூறுகையில்:
இதுவரை 87 சதவீத பணிகள் நிறைவு பெற்றுள்ளன. மழையால் பணியில் சற்று தொய்வு தென்பட்டுள்ளது. மின்சாரம் மற்றும் மின்னணுவியல் பணிகள் நடந்து வருகின்றன.
அடுத்தாண்டு ஜனவரியில் திட்டப்பணி நிறைவு பெற்று பரிசோதனை மேற்கொள்ளப்படும். ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் பெய்யும் மழை வெளியேறும் நீரின் அடிப்படையில் வெள்ளோட்டம் பார்க்கப்படும் என்றார்
பவானி ஆற்றில் செல்லும் தண்ணீர் பவானிசாகர் அணை வழியாக காளிங்கராயன் அணைக்கட்டில் நிரம்பி அதில் இருந்து வெளியேறும் நீரை 1.5 டி.எம்.சி.. அளவுக்கு நீரேற்று நிலையங்கள் மூலம் பெற்று இத்திட்டப்பணிக்கு பயன்படுத்தப்பட உள்ளது.
இந்தாண்டு பெய்த மழையால் அணையில் இருந்து உபரிநீர் அதிகளவில் வெளியேறியது. அடுத்தாண்டு ஜூலை, ஆகஸ்ட் மாதம் பலத்த மழை பெய்து காளிங்கராயன் அணைக்கட்டில் இருந்து உபரிநீர் வெளியேறும்போது அத்திக்கடவு திட்டம் வெள்ளோட்டம் பார்க்க திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X