என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
3 பேர் பலியான சாய ஆலையில் அதிகாரிகள் அதிரடி ஆய்வு
Byமாலை மலர்15 Nov 2021 9:57 AM GMT (Updated: 15 Nov 2021 11:07 AM GMT)
விபத்து குறித்து பாதிக்கப்பட்டவர்களிடம் விபரங்கள் சேகரித்தனர். ஆய்வு முடிந்ததும் தமிழக அரசுக்கு அறிக்கை அனுப்பப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டம், பல்லடம் சாலை வித்யாலயம் அருகே உள்ள கொத்துக்காடு தோட்டம் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான சாய ஆலை செயல்பட்டு வருகிறது.
இங்கு கழிவுநீர் தொட்டியில் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டபோது விஷவாயு தாக்கியதில் சாய ஆலை மேலாளர் தினேஷ், தொழிலாளி வடிவேல் ஆகியோர் உயிரிழந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த எலக்ட்ரிஷியன் ராஜேந்திரன் சிகிச்சை பலனளிக்காமல் இன்று உயிரிழந்தார். இதன் மூலம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.
இந்தநிலையில் தொழிலாளர்கள் பலியான சாய ஆலையில் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார துறை இணை இயக்குனர் புகழேந்தி தலைமையில் அதிகாரிகள் இன்று ஆய்வு மேற்கொண்டனர். விபத்து குறித்து பாதிக்கப்பட்டவர்களிடம் விபரங்கள் சேகரித்தனர். ஆய்வு முடிந்ததும் தமிழக அரசுக்கு அறிக்கை அனுப்பப்படும் என தெரிவித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X