search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    அவிநாசி கோவிலில் பராமரிப்பற்ற கழிப்பறையால் பக்தர்கள் அவதி

    வரலாற்று சிறப்புமிக்க இக்கோவிலுக்கு கோவை, திருப்பூர், நீலகிரி உள்ளிட்ட மாவட்டத்தை சேர்ந்த பக்தர்கள் தரிசனம் செய்ய வருகின்றனர்.
    அவினாசி:

    கொங்கு ஏழு சிவாலயங்களில் முதன்மை பெற்றதாக அவினாசி அவினாசிலிங்கேசுவரர் கோவில் உள்ளது. இக்கோவில் வளாகத்தில் கரிவரதராஜப்பெருமாள் கோவில், வீரஆஞ்சநேயர் கோவில், காரணப்பெருமாள் கோவில், பாதிரிமரத்து அம்மன் உள்ளிட்ட கோவில்கள் உள்ளது. 

    வரலாற்று சிறப்புமிக்க இக்கோவிலுக்கு கோவை, திருப்பூர், நீலகிரி உள்ளிட்ட மாவட்டத்தை சேர்ந்த பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் தினசரி சாமி தரிசனம் செய்ய வருகின்றனர். அவ்வாறு வரும் பக்தர்களின் வசதிக்காக குளியல் மற்றும் கழிவறை கோவில் வளாகத்தில் உள்ளது. 

    ஆனால் கழிவறைகள் பராமரிப்பின்றி சுத்தம் செய்யாமல் பக்தர்களின் முகம் சுழிக்கும் அவலநிலையில் உள்ளது. மேலும் சரிவர தண்ணீர் வசதியும் இல்லை என்று பக்தர்கள் தெரிவிக்கின்றனர். 

    எனவே தினசரி திரளான பக்தர்கள் கூடும் கோவில் வளாகத்தில் உள்ள கழிவறையை முறையாக பாரமரித்து தண்ணீர் வசதி செய்து தர வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
    Next Story
    ×