என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அவிநாசி கோவிலில் பராமரிப்பற்ற கழிப்பறையால் பக்தர்கள் அவதி
Byமாலை மலர்15 Nov 2021 9:18 AM GMT (Updated: 15 Nov 2021 9:18 AM GMT)
வரலாற்று சிறப்புமிக்க இக்கோவிலுக்கு கோவை, திருப்பூர், நீலகிரி உள்ளிட்ட மாவட்டத்தை சேர்ந்த பக்தர்கள் தரிசனம் செய்ய வருகின்றனர்.
அவினாசி:
கொங்கு ஏழு சிவாலயங்களில் முதன்மை பெற்றதாக அவினாசி அவினாசிலிங்கேசுவரர் கோவில் உள்ளது. இக்கோவில் வளாகத்தில் கரிவரதராஜப்பெருமாள் கோவில், வீரஆஞ்சநேயர் கோவில், காரணப்பெருமாள் கோவில், பாதிரிமரத்து அம்மன் உள்ளிட்ட கோவில்கள் உள்ளது.
வரலாற்று சிறப்புமிக்க இக்கோவிலுக்கு கோவை, திருப்பூர், நீலகிரி உள்ளிட்ட மாவட்டத்தை சேர்ந்த பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் தினசரி சாமி தரிசனம் செய்ய வருகின்றனர். அவ்வாறு வரும் பக்தர்களின் வசதிக்காக குளியல் மற்றும் கழிவறை கோவில் வளாகத்தில் உள்ளது.
ஆனால் கழிவறைகள் பராமரிப்பின்றி சுத்தம் செய்யாமல் பக்தர்களின் முகம் சுழிக்கும் அவலநிலையில் உள்ளது. மேலும் சரிவர தண்ணீர் வசதியும் இல்லை என்று பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே தினசரி திரளான பக்தர்கள் கூடும் கோவில் வளாகத்தில் உள்ள கழிவறையை முறையாக பாரமரித்து தண்ணீர் வசதி செய்து தர வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X