search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    தண்ணீர் நிரம்பி ரம்மியமாக காட்சியளிக்கும் பனங்குட்டை

    முறியாண்டம்பாளையம் பகுதிகளில் நீர்வழித்தடங்களில் இருந்து வழிந்தோடி வரும் தண்ணீர் இந்த குட்டையில் சேகரமாகிறது.
    அவிநாசி:

    அவிநாசி ஒன்றியம் சேவூர் அருகே முறியாண்டம்பாளையம் ஊராட்சியில் பனங்குட்டை உள்ளது. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் நீர்வள ஆதார பாதுகாப்பு மற்றும் நீர் மேலாண்மை இயக்கம் சார்பில் ரூ. 1.10 லட்சம் செலவில் தூர்வாரி சுத்தம் செய்யப்பட்டது. முறியாண்டம்பாளையம் பகுதிகளில் நீர்வழித்தடங்களில் இருந்து வழிந்தோடி வரும் தண்ணீர் இந்த குட்டையில் சேகரமாகிறது.

    கடந்த 2020 ஜூலையில் பெய்த மழையில் குட்டை நிரம்பியது. பின் ஏற்பட்ட வறட்சியால் தண்ணீர் வற்றியது. சமீபத்தில் பெய்த மழையில் இக்குட்டை நிரம்பி ரம்மியமாக காட்சியளிக்கிறது. இதன் மூலம் சுற்றுவட்டார பகுதிகளில் நிலத்தடி நீர் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    Next Story
    ×