search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    சம்பா சாகுபடியில் களைகளை அகற்றாவிட்டால் மகசூல் பாதிக்கும் - வேளாண் துறை எச்சரிக்கை

    சம்பா பருவ நெல் சாகுபடியில் பயிர் வளர்ச்சியின் போது ஏற்படும் களைகளால் 10 முதல் 25 சதவீதம் வரை நெல் மகசூல் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.
    மடத்துக்குளம்:

    சம்பா சாகுபடியில் களைகளை அகற்றாவிட்டால் மகசூல் பாதிக்கும் என வேளாண் துறையினர் தெரிவித்துள்ளனர்.

    இதுகுறித்து மடத்துக்குளம் வேளாண்மைதுறை உதவி இயக்குனர் ராஜேஸ்வரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    சம்பா பருவ நெல் சாகுபடியில்  பயிர் வளர்ச்சியின் போது ஏற்படும் களைகளால் 10 முதல் 25 சதவீதம் வரை நெல் மகசூல் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. இதைத் தவிர்க்க நடவுக்கு பின் 15 தொடங்கி 40 நாட்களுக்குள் இரண்டு முறை களை எடுக்கப்பட வேண்டும். 

    தொழிலாளர்கள் பற்றாக்குறை உள்ளதால் களைகளை மேற்கொள்வது சிரமமாகவும், செலவு அதிகமாக இருக்கலாம். இதற்குத் தீர்வாக களைகள் முளைக்கும் முன் புயூட்டாக்ளோர் அல்லது அனிலேபாஸ், தியோபென் கார்ப் அல்லது பென்டிமெத்தலின் பயன்படுத்தலாம்.

    களைக்கொல்லி 50 கிலோ மணலுடன் கலந்து  நடவு செய்த மூன்றாவது நாளில் மெல்லிய நீர்ப்படலம் இருக்கும் நிலத்தில் சீராக இட வேண்டும். களைகள் முளைத்த பின் 2.4.டி சோடியம் உப்பு அல்லது பிஸ்பைரி பேக் சோடியம் பயன்படுத்தலாம்.

    செம்மை நெல் சாகுபடி முறையில் நடவு செய்த வயல்களில் 10 நாட்களுக்கு ஒரு முறை பயிர்களுக்கு இடையே களையெடுக்கும் கருவியை இயக்கி களைகளை அகற்ற வேண்டும். களைகளை அகற்றாவிட்டால் மகசூல் பாதிக்கும். எனவே விவசாயிகள் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×