என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கொமரலிங்கம் பேரூராட்சியில் வேலை உறுதி திட்டம் - பொதுமக்கள் வரவேற்பு
Byமாலை மலர்12 Nov 2021 4:21 AM GMT (Updated: 12 Nov 2021 4:21 AM GMT)
மத்திய அரசின் வேலை உறுதி திட்டத்தை கொமரலிங்கம் பேரூராட்சி பகுதிக்கும் விரிவுபடுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
மடத்துக்குளம்:
மடத்துக்குளம் பகுதியில் உள்ள கொமரலிங்கம் பேரூராட்சியில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் உள்ளனர். இதில் 70 சதவீத மக்கள் நடுத்தர குடும்பங்களை சேர்ந்தவர்களாகவும், பெரும்பான்மையோர் கூலித்தொழிலாளர்களாக உள்ளனர். இவர்களுக்கு பேரூராட்சி பகுதியில் போதிய வேலை கிடைக்காததால் பலரும் சிரமப்பட்டு வந்தனர்.
எனவே மத்திய அரசின் வேலை உறுதி திட்டத்தை கொமரலிங்கம் பேரூராட்சி பகுதிக்கும் விரிவுபடுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். கம்யூனிஸ்டு கட்சியினர் இதை வலியுறுத்தி தொடர்ந்து பல போராட்டங்கள் நடத்தினர். இதனை ஏற்ற தற்போதைய அரசு கொமரலிங்கம் பேரூராட்சிக்கும் இந்த திட்டத்தை விரிவுபடுத்தியுள்ளது.
முதல் கட்டமாக பேரூராட்சி பகுதியில் 500 பயனாளிகள் தேர்வு செய்து திட்டப்பணிகளில் ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதுகுறித்து தொழிலாளர்கள் கூறியதாவது:
பேரூராட்சி பகுதியில் போதிய வேலை வாய்ப்பு இல்லாத காரணத்தினால் சராசரி வருமானம் மிகக்குறைவாக இருந்தது. இதனால் பலரும் வெளியூருக்கு சென்று தினக்கூலிகளாக வேலை பார்த்தோம். அங்கும் எங்களுக்கு தொடர்ந்து வேலை கிடைக்கவில்லை. வருவாய் இன்றி தவித்தோம்.
தற்போது, வேலை உறுதி திட்டத்தை பேரூராட்சி பகுதிக்கு விரிவுபடுத்தி இருப்பதை மிகவும் வரவேற்கிறோம். இந்தத் திட்டப்பணியில் ஈடுபட ஆர்வமாக உள்ளோம் என்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X