search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் - திருப்பூரில் வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணிகள் தீவிரம்

    கடந்த சட்டசபை தேர்தலில் உள்ள வாக்காளர் எண்ணிக்கைப்படி ஓட்டுச்சாவடிகளை தயார் செய்ய அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
    அவிநாசி:

    தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி தேர்தலை நடத்தி முடிக்க தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. அதன்படி உள்ளாட்சி அமைப்புகளில் 100 சதவீத ஓட்டளிப்பை உறுதிப்படுத்தும் வகையில் வாக்காளர் பட்டியலில் துல்லிய தன்மையை கொண்டு வர உள்ளாட்சி அமைப்புகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

    அதன்படி சில நாட்களுக்கு முன் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. கடந்த சட்டசபை தேர்தலில் உள்ள வாக்காளர் எண்ணிக்கைப்படி ஓட்டுச்சாவடிகளை தயார் செய்யவும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

    ‘வாக்காளர் பட்டியலில் திருத்தம், குறைகளை சரி செய்து, வரும் 24-ந் தேதிக்குள் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் அச்சுப்பணியை முடிக்க வேண்டும் எனவும், வரும் 25ம் தேதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டு அரசியல் கட்சியினருக்கு வழங்க வேண்டும். 

    27-ந் தேதி வாக்காளர் பட்டியல் இறுதி அறிக்கையை தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. அதற்கேற்ப திருப்பூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலை இறுதி செய்யும் பணியில் நகர்ப்புற உள்ளாட்சி நிர்வாகத்தினர் வேகம் காட்டி வருகின்றனர்.
    Next Story
    ×