search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விஷம்
    X
    விஷம்

    தனியார் நிறுவன ஊழியர் விஷம் குடித்து உயிரிழப்பு

    கரூரில் தனியார் நிறுவன ஊழியர் விஷம் குடித்து உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கரூர்:

    கரூர் பசுபதிபாளையம் தெற்கு தெருவை சேர்ந்தவர் ஐயப்பன் (வயது 45). தனியார் நிறுவன ஊழியரான இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வந்ததாக தெரிகிறது. சம்பவத்தன்று வீட்டில் விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்த ஐயப்பனை அவரது உறவினர்கள் மீட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர்.

    இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி ஐயப்பன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த தாந்தோணிமலை போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காந்திகிராமத்தில் அமைந்துள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×