search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னை வானிலை ஆய்வு மையம்
    X
    சென்னை வானிலை ஆய்வு மையம்

    தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

    வங்க கடலில் இன்று குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி, அது வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருமாறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
    சென்னை:
    தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

    இந்நிலையில், வங்க கடலில் இன்று குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி, படிப்படியாக அது வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருமாறி வரும் 11-ம் தேதி வடதமிழக கடற்கரையை நெருங்கும்  எனவும், இதனால் வடதமிழகத்தில் கனமழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே தெரிவித்திருந்தது.

    இதன் எதிரொலியால் இன்று சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், நாகபட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி,  விருதுநகர் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

    Next Story
    ×