search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிறப்பு பஸ்கள்
    X
    சிறப்பு பஸ்கள்

    தீபாவளி கொண்டாட சொந்த ஊர் சென்றவர்கள் சென்னை திரும்ப 4,300 சிறப்பு பஸ்கள்

    சென்னையை தவிர்த்து மற்ற நகரங்களுக்கு 730 சிறப்பு பஸ்கள் இன்று இயக்கப்படுகின்றன. சிறப்பு பஸ்களில் பயணம் செய்ய முன்பதிவு செய்தவர்கள் இன்று முதல் பயணத்தை தொடங்குகிறார்கள்.
    சென்னை:

    தீபாவளி பண்டிகையை கொண்டாட வெளியூர் செல்லும் பொதுமக்கள் வசதிக்காக சென்னையில் இருந்து 16,500 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. பண்டிகை முடிந்து சென்னை திரும்ப வசதியாகவும் சிறப்பு பஸ்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

    அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் 9,319 சிறப்பு பஸ்கள் சென்னை உட்பட பல்வேறு நகரங்களுக்கு இன்று முதல் 4 நாட்களுக்கு இயக்கப்படுகிறது.

    சென்னையில் இருந்து பிற நகரங்களுக்கு தினமும் 2,100 பஸ்கள் இயக்கப்படுகின்றன. அந்த வகையில் 8,400 பஸ்கள் உள்பட சிறப்பு பஸ்கள் 9,319 சேர்த்து மொத்தம் 17,719 பஸ்கள் இயக்கப்படுகிறது.

    பல்வேறு நகரங்களில் இருந்து சென்னைக்கு இன்று 643 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. தீபாவளி முடிந்து ஒரு சிலர் இன்று வெளியூர் பயணத்தை மேற்கொள்வார்கள் என்ற அடிப்படையில் குறைந்த அளவில் சிறப்பு பேருந்துகள் விடப்பட்டுள்ளது.

    சென்னையை தவிர்த்து மற்ற நகரங்களுக்கு 730 சிறப்பு பஸ்கள் இன்று இயக்கப்படுகின்றன. சிறப்பு பஸ்களில் பயணம் செய்ய முன்பதிவு செய்தவர்கள் இன்று முதல் பயணத்தை தொடங்குகிறார்கள்.

    நாளை (சனிக்கிழமை) பல்வேறு பகுதிகளில் இருந்து சென்னைக்கு 913 பஸ்களும், சென்னையை தவிர்த்து பிற நகரங்களுக்கு 900 பஸ்களும் இயக்கப்படுகின்றன.

    ஞாயிற்றுக்கிழமை (7-ந் தேதி) சென்னைக்கு 1,729 சிறப்பு பஸ்களும், பிற நகரங்களுக்கு 2,180 பஸ்களும் இயக்கப்பட உள்ளன. திங்கட்கிழமை பெரும்பாலானவர்கள் பணிக்கு திரும்புவார்கள் என்ற அடிப்படையில் ஞாயிற்றுக்கிழமை அதிகளவில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    8-ந் தேதி பல்வேறு நகரங்களில் இருந்து சென்னைக்கு 1,034 பஸ்களும், சென்னையை தவிர பிற நகரங்களுக்கு 1,190 பஸ்களும் விடப்பட்டுள்ளது. வெளியூர்களில் இருந்து சென்னை திரும்பும் பயணிகள் போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் இருப்பதற்காக பெருங்களத்தூரில் விரிவான ஏற்பாடுகளை போலீசாரும், போக்குவரத்து அதிகாரிகளும் செய்துள்ளனர்.

    வெளியூர்களில் இருந்து வரக்கூடிய பஸ்கள் பூந்தமல்லி மற்றும் கோயம்பேடு பஸ் நிலையத்திற்கு அதிகாலைக்குள் வந்து சேரும் வகையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. காலை 6 மணிக்கு பின்னர் வரக்கூடிய பஸ்கள், வெளிவட்ட சாலை வழியாக பூந்தமல்லி, கோயம்பேடு செல்கிறது.

    இன்று முதல் 4 நாட்களும் வெளியூர்களில் இருந்து சென்னைக்கு பெருமளவில் வாகனங்கள் வரும் என்பதால், நெரிசல் இல்லாமல் செல்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் போக்குவரத்து போலீசார் எடுத்து வருகிறார்கள்.



    Next Story
    ×