search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    தேனி மாவட்டத்தில் மது விற்றவர்கள் கைது

    தேனி மாவட்டத்தில் மது விற்றவர்களை போலீசார் கைது செய்தனர்.
    தேனி

    தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மூலம் மது விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆனால் கிராமங்களில் உள்ள சிலர் மொத்தமாக மதுபாட்டில்களை வாங்கி வெளியே கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர்.

    பெரியகுளம் போலீசார் பங்களாபட்டி பிரிவு அருகே ரோந்து சென்றபோது அங்கு மதுவிற்ற சரவணன் (வயது43) என்பவரை கைது செய்து 5 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    தேவதானப்பட்டி போலீசார் தெற்கு தெரு பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு மது விற்ற சுப்புத்தாய் (வயது70) என்பவரை கைது செய்து 6 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    தேவாரம் போலீசார் மல்லிங்காபுரம் மேற்கு ஓடை பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு மது விற்ற மூணாண்டிபட்டியை சேர்ந்த சசி என்பவரை கைது செய்து 28 மதுபாட்டில்கள் மற்றும் செல்போனையும் பறிமுதல் செய்தனர்.
    Next Story
    ×