search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஊத்துக்குளி திருப்பூர் சாலையை படத்தில் காணலாம்.
    X
    ஊத்துக்குளி திருப்பூர் சாலையை படத்தில் காணலாம்.

    வேகத்தடை அமைக்கப்படாததால் ஊத்துக்குளி திருப்பூர் சாலையில் தொடரும் விபத்துகள்

    விபத்துக்களை தடுக்க ஊத்துக்குளி ரவுண்டானா - நால் ரோடு சந்திப்பு திருப்பூர் சாலையில் வேகத்தடை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
    ஊத்துக்குளி:

    திருப்பூர் ஊத்துக்குளி ரவுண்டானா பகுதியில் இருந்து திருப்பூர் மெயின் சாலைக்கு செல்லும் வழியில் 4 ரோடு பிரிவு உள்ளது. இந்த சாலையில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி , புகழ்பெற்ற கதித்தமலை முருகன் கோவில் உள்ளது. 

    காலை நேரத்தில் இப்பகுதியில் அதிகமான வாகன நெரிசல் காணப்படுகிறது. மேலும் மாணவர்கள், பொதுமக்கள் சென்று வருகின்றனர். வாகனங்கள் வேகமாக வருவதால் பொதுமக்கள், மாணவர்கள் மிகவும் அச்சத்துடன் அந்த வழியாக செல்கின்றனர். விபத்துகளும் அடிக்கடி நடைபெற்று வருகிறது. இன்று காலை ஆட்டோவும் மோட்டார் சைக்கிளும் மோதிக்கொண்டன.

    எனவே விபத்துக்களை தடுக்க ஊத்துக்குளி ரவுண்டானா - நால் ரோடு சந்திப்பு திருப்பூர் சாலையில் வேகத்தடை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். 

    இருப்பினும் இன்னும் நடவடிக்கை எடுக்கப்படாமல் உள்ளது. எனவே இனிமேல் விபத்துகள் ஏற்படுவதை தடுக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
    Next Story
    ×