search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ககன்தீப் சிங் பேடி
    X
    ககன்தீப் சிங் பேடி

    சென்னை மாநகராட்சி தேர்தல்- 200 வார்டுக்கும் உதவி தேர்தல் அதிகாரிகள் நியமனம்

    சென்னை மாநகராட்சியில் 200 வார்டுகளுக்கு 37 அதிகாரிகளை நியமித்து மாநகராட்சி கமி‌ஷனர் ககன்தீப் சிங் பேடி உத்தரவிட்டுள்ளார்.
    சென்னை:

    சென்னை மாநகராட்சியில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற டிசம்பர் மாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இப்பணிகளில் மாநில தேர்தல் ஆணையம் ஈடுபட்டு வருகிறது.

    இந்த நிலையில் சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வார்டுக்கும் தேர்தல் நடத்தும் உதவி அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான அறிவிப்பை மாநில தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்துடன் சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.

    இதில் சென்னை மாநகராட்சியில் 200 வார்டுகளுக்கு 37 அதிகாரிகளை நியமித்து மாநகராட்சி கமி‌ஷனர் ககன்தீப் சிங் பேடி உத்தரவிட்டுள்ளார்.

    இதில் ஒவ்வொரு அதிகாரிக்கும் குறைந்தபட்சமாக நான்கு வார்டுகளும், அதிகபட்சமாக 7 வார்டுகளும் ஒதுக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×