search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாநகராட்சி தேர்தல்"

    மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் வார்டு மறுவரையறை செய்யும் பணிகள் முடிக்கப்பட்டு அந்த பட்டியலையும் மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

    சென்னை:

    மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி தேர்தலுக்கான அட்டவணை தயாரிப்பு பணிகளை மாநில தேர்தல் ஆணையம் முடித்துள்ளது.

    இம்மாத இறுதியில் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என தகவல் வெளியாகி வருகிறது.

    பஞ்சாயத்து, பஞ்சாயத்து யூனியன், மாவட்ட பஞ்சாயத்து உள்ளிட்ட பதவிகளுக்கு 2019-ம் ஆண்டு 27 மாவட்டங்களுக்கு தேர்தல் நடத்தப்பட்டன. மீதம் உள்ள மாவட்டங்களுக்கு கடந்த மாதம் தேர்தல் நடத்தப்பட்டு புதிய தலைவர்கள், கவுன்சிலர்கள் பதவி ஏற்றுக் கொண்டனர்.

    இதன் அடுத்த கட்டமாக மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற தேர்தல் நடத்தப்பட உள்ளன.

    உச்சநீதிமன்ற உத்தரவுபடி, இதற்கான பணிகளில் மாநில தேர்தல் ஆணையம் தீவிரமாக செய்து வருகிறது.

    இதற்காக மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் வார்டு மறுவரையறை செய்யும் பணிகள் முடிக்கப்பட்டு அந்த பட்டியலையும் மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

    எந்தெந்த வார்டுகள் ஆண் வார்டு, பெண் வார்டு, பொது வார்டு உள்ளிட்ட விவரங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.

    இதைத் தொடர்ந்து எந்தெந்த மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கு முதல் கட்டமாக தேர்தல் நடத்துவது, 2-வது கட்டமாக எந்தெந்த மாநகராட்சி, நகராட்சிகளுக்கு தேர்தல் நடத்துவது என்ற அட்டவணை தயாரிக்கும் பணிகளில் தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

    இந்த பணி ஓரிரு நாளில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ஏற்கனவே வருகிற 25-ந் தேதி தேர்தல் தேதிக்கான அட்டவணையை வெளியிட ஆணையம் முடிவு செய்திருந்தது.

    ஆனால் கடந்த 10 நாட்களுக்கு முன்பு பலத்த மழை பெய்ததால் பல மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதப்பதை கருத்தில் கொண்டு இம்மாத இறுதியில் தேர்தல் தேதியை அறிவிக்கலாம் என தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    வெள்ளசேத பயிர் நிவாரணம், பொங்கல் தொகுப்பு என அறிவித்து தி.மு.க. தேர்தலுக்கு தயாராகி விட்டது. ஓரிரு நாளில் வெள்ள நிவாரண உதவி அறிவிப்பும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி தேர்தலில் போட்டியிட விரும்புவோரிடம் இருந்து தி.மு.க. விருப்ப மனுவும் வாங்கி வருகிறது.

    எனவே இம்மாத இறுதியில் தேர்தல் தேதி வெளியாகி விடும் என்று கட்சி வட்டாரத்தில் கூறப்படுகிறது.

    புதிதாக பிரிக்கப்பட்ட தாம்பரம் மாநகராட்சி, காஞ்சிபுரம் மாநகராட்சி உள்ளிட்ட தரம் உயர்த்தப்பட்ட மாநராட்சிகளுக்கு இப்போது தேர்தல் நடைபெறாது.

    சென்னை, மதுரை, திருச்சி, கோவை உள்பட 15 பழைய மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கு மட்டுமே இப்போது தேர்தல் நடைபெறும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


    இதையும் படியுங்கள்... விவசாய சங்கங்கள் இன்று மீண்டும் ஆலோசனை- பாராளுமன்றத்தை நோக்கி டிராக்டர் பேரணி நடத்த முடிவு?

    பெருநகர சென்னை மாநகராட்சி தேர்தலுக்கு 5 ஆயிரத்து 794 வாக்குச்சாவடி மையங்கள் இறுதி செய்யப்பட்டுள்ளது. எந்தெந்த இடங்கள் என்ற பட்டியல் இன்று வெளியாகிறது.
    சென்னை:

    தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நிறைவு பெற்றுள்ள நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகளை மாநில தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகின்றது.

    அந்தவகையில் பெருநகர சென்னை மாநகராட்சியில் 200 வார்டுகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக 5 ஆயிரத்து 794 வாக்குச்சாவடிகள் இறுதி செய்யப்பட்டுள்ளது.

    இதுகுறித்து பெருநகர சென்னை மாநகராட்சி அலுவலகம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 200 வார்டுகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு வரைவு வாக்குச்சாவடி பட்டியல் மாவட்ட தேர்தல் அலுவலரான மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடியால் கடந்த 6-ந்தேதி அன்று வெளியிடப்பட்டது.

    இந்த வரைவு வாக்குச்சாவடி பட்டியல் மாநகராட்சி தலைமை அலுவலகம், 15 மண்டல அலுவலகங்கள் மற்றும் 200 வார்டு அலுவலகங்களிலும் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டது. இதையடுத்து எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட கட்சி பிரதிநிதிகளுடன் கலந்தாய்வு கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலரான மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி தலைமையில் கடந்த 15-ந்தேதி நடைபெற்றது.

    வரைவு வாக்குச்சாவடி பட்டியல் குறித்து ஏதேனும் ஆட்சேபனைகள் மற்றும் கருத்துகள் இருப்பின் 16-ந்தேதிக்குள் வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது. அவ்வாறு பெறப்பட்ட ஆட்சேபனைகள் மற்றும் கருத்துகளின் அடிப்படையில் பரிசீலிக்கப்பட்டு, திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டது.

    அதன்படி ஆண் வாக்காளர்களுக்காக 255 வாக்குச்சாவடிகள், பெண் வாக்காளர்களுக்காக 255 வாக்குச்சாவடிகள் மற்றும் அனைத்து வாக்காளர்களுக்காக 5 ஆயிரத்து 284 வாக்குச்சாவடிகள் என மொத்தம் 5 ஆயிரத்து 794 வாக்குச்சாவடிகள் இறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த பட்டியல் மாநகராட்சி தலைமை அலுவலகம், 15 மண்டல அலுவலகங்கள் மற்றும் 200 வார்டு அலுவலகங்களிலும் இன்று (வியாழக்கிழமை) முதல் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படும். அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு இறுதி செய்யப்பட்ட வாக்குச்சாவடி பட்டியல் வழங்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கு அடுத்த மாதம் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுவதால் அதில் கட்சி நிர்வாகிகள் போட்டியிடுவது சம்பந்தமாக டி.டி.வி.தினகரன் ஆலோசனை மேற்கொண்டார்.

    சென்னை:

    அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் கட்சி நிர்வாகிகளுடன் இன்று ஆலோசனை நடத்தினார்.

    சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.ம.மு.க. தலைமை கழகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் துணை பொதுச் செயலாளர் முன்னாள் அமைச்சர் ஜி.செந்தமிழன், பொருளாளர் மனோகரன், செய்தி தொடர்பாளர் சி.ஆர்.சரஸ்வதி உள்ளிட்ட தலைமை கழக நிர்வாகிகள் மற்றும் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்ட நிர்வாகிகளுடன் இன்று காலையில் ஆலோசனை மேற்கொண்டார்.

    இன்று மதியம் ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதில் மாவட்ட கழக செயலாளர்கள், அணிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கு அடுத்த மாதம் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுவதால் அதில் கட்சி நிர்வாகிகள் போட்டியிடுவது சம்பந்தமாக டி.டி.வி.தினகரன் ஆலோசனை மேற்கொண்டார்.

    இந்த ஆலோசனை கூட்டம் நாளையும், நாளை மறுநாளும் நடைபெறுகிறது. இதில் மத்திய மண்டலம், தென் மண்டல கட்சி நிர்வாகிகள் கலந்து கொள்ள உள்ளனர்.

    நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் மட்டுமின்றி சசிகலா சுற்றுப்பயணம் செய்யும் மாவட்டங்களில் அவருக்கு சிறப்பான வரவேற்பு கொடுப்பது குறித்தும் டி.டி.வி.தினகரன் நிர்வாகிகளுடன் விரிவாக ஆலோசனை நடத்துகிறார்.


    இதையும் படியுங்கள்... 13,14,15 ஆகிய தேதிகளில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வி.ஐ.பி. தரிசனம் ரத்து

    ×