search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    உடுமலை, கிளுவங்காட்டூர் பகுதியில் நாளை மின்தடை

    கிளுவங்காட்டூர் துணை மின் நிலையத்திற்குட்பட்ட பகுதியில்அமராவதி நகர், பெரும்பள்ளம் பகுதியில் நாளை மின்தடை செய்யப்படுகிறது.
    உடுமலை:

    உடுமலை, கிளுவங்காட்டூர் ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் கீழ்க்கண்ட பகுதிகளில் நாளை 1-ந்தேதி  (திங்கட்கிழமை)காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய செயற்பொறியாளர்சதீஷ்குமார்  தெரிவித்துள்ளார். அதன்படி மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள் விவரம் வருமாறு:-

    உடுமலை துணை மின் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் உடுமலை விஜி ராவ் நகர், ராமசாமி நகர், ஜீவா நகர், சக்தி நகர், அரசு கலைக் கல்லூரி, குறிஞ்சேரி, புக்குளம், பெதப்பம்பட்டி, சோமவாரபட்டி, ஆலாமரத்தூர், போடிபட்டி, அண்ணா நகர், காமராஜ் நகர், பள்ளபாளையம், கொங்கலக் குறிச்சி, குறிச்சிக்கோட்டை, வித்யாசாகர்  கல்லூரி, கணபதிபாளையம், பொட்டையம்பாளையம், ராகல்பாவி பிரிவு.

    கிளுவங்காட்டூர் துணை மின் நிலையத்திற்குட்பட்ட பகுதியில்அமராவதி நகர், பெரும்பள்ளம், சாயப்பட்டறை, செக்போஸ்ட், மானுப்பட்டி, சைனிக் பள்ளி, தும்பலப்பட்டி, ஆண்டியகவுண்டனூர், ஆலாம்பாளையம், கரட்டுமேடு, கல்லாபுரம், கிளுவன்காட்டூர், எலையமுத்தூர், ஜக்கம்பாளையம், பெரிசனம்பட்டி, குட்டிய கவுண்டனூர், குருவப்பநாயக்கனூர் ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. 
    Next Story
    ×