என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காயல்பட்டினம் அரசு மருத்துவமனை குடோனில் திருடிய வாலிபர் கைது
Byமாலை மலர்29 Oct 2021 9:33 AM GMT (Updated: 29 Oct 2021 9:33 AM GMT)
காயல்பட்டினம் அரசு மருத்துவமனை குடோனில் இருந்து இரும்பு கட்டில் ஒன்றை மர்ம ஆசாமி ஒருவர் பட்டப்பகலில் தனது தலையில் வைத்து தூக்கி செல்வது போன்ற ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆறுமுகநேரி:
காயல்பட்டினம் அரசு மருத்துவமனையில் ஆண்கள் வார்டாக இருந்த பழைய கட்டிடத்தை குடோனாக உபயோகித்து வந்தனர். அங்கு நோயாளிகள் பயன்படுத்தி பழுதடைந்த சுமார் 30 இரும்பு கட்டில்கள், அலுவலகத்தில் உபயோகித்த மேஜை, நாற்காலிகள், உபயோகமற்ற ஜெனரேட்டர் உள்ளிட்ட பொருள்கள் ஏராளமாக வைக்கப்பட்டிருந்தது. இவற்றில் பெரும்பாலான பொருட்களை மர்மநபர்கள் திருடி சென்றுள்ளனர்.
அங்கிருந்த இரும்பு கட்டில் ஒன்றை மர்ம ஆசாமி ஒருவர் பட்டப்பகலில் தனது தலையில் வைத்து தூக்கி செல்வது போன்ற ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனைத்தொடர்ந்து காயல்பட்டினம் அரசு மருத்துவமனை அதிகாரியான டாக்டர் ராணி டப்ஸ் அந்த குடோனை ஆய்வு செய்தார்.
அப்போது அங்கிருந்த பொருள்கள் திருடு போய் இருந்தது குறித்து ஆறுமுகநேரி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் அமலோற்பவம் விசாரணை செய்துவந்தார்.
இந்நிலையில் திருட்டு தொடர்பாக காயல்பட்டினம் மங்கள விநாயகர் கோவில் தெருவை சேர்ந்த பட்டு சுரேஷ் (வயது 21) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.
காயல்பட்டினம் அரசு மருத்துவமனையில் ஆண்கள் வார்டாக இருந்த பழைய கட்டிடத்தை குடோனாக உபயோகித்து வந்தனர். அங்கு நோயாளிகள் பயன்படுத்தி பழுதடைந்த சுமார் 30 இரும்பு கட்டில்கள், அலுவலகத்தில் உபயோகித்த மேஜை, நாற்காலிகள், உபயோகமற்ற ஜெனரேட்டர் உள்ளிட்ட பொருள்கள் ஏராளமாக வைக்கப்பட்டிருந்தது. இவற்றில் பெரும்பாலான பொருட்களை மர்மநபர்கள் திருடி சென்றுள்ளனர்.
அங்கிருந்த இரும்பு கட்டில் ஒன்றை மர்ம ஆசாமி ஒருவர் பட்டப்பகலில் தனது தலையில் வைத்து தூக்கி செல்வது போன்ற ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனைத்தொடர்ந்து காயல்பட்டினம் அரசு மருத்துவமனை அதிகாரியான டாக்டர் ராணி டப்ஸ் அந்த குடோனை ஆய்வு செய்தார்.
அப்போது அங்கிருந்த பொருள்கள் திருடு போய் இருந்தது குறித்து ஆறுமுகநேரி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் அமலோற்பவம் விசாரணை செய்துவந்தார்.
இந்நிலையில் திருட்டு தொடர்பாக காயல்பட்டினம் மங்கள விநாயகர் கோவில் தெருவை சேர்ந்த பட்டு சுரேஷ் (வயது 21) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X