search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    ரேசன் கடைகளில் பொருட்கள் சப்ளை - புகார்களை தெரிவிக்க தொலைபேசி எண் அறிவிப்பு

    வருகிற 1-ந்தேதி முதல் 3-ந்தேதி வரை ரேஷன் கடைகள் காலை 8 மணிமுதல் இரவு 7 மணி வரை செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
    திருப்பூர்:

    தீபாவளியை முன்னிட்டு ரேசன்  கடைகளில் பல்வேறு பொருட்கள் வழங்கப்பட உள்ளது. இப்போது இருந்தே பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்க தொடங்கியுள்ளனர். 

    இந்தநிலையில் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையிலும், பொதுமக்கள் எந்தவித சிரமமின்றி பொருட்களை வாங்கும் வகையிலும் வருகிற 1-ந்தேதி முதல் 3-ந்தேதி வரை ரேஷன் கடைகள் காலை 8 மணிமுதல் இரவு 7 மணி வரை செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

    இந்த வாய்ப்பை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்பட்டுள்ளது. மேலும் ஏதேனும் புகார் இருப்பின் 0421-2971116 என்ற எண்ணில் தெரிவிக்கலாம் என கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×