என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பது எப்படி?- தீயணைப்புத்துறை விளக்கம்
Byமாலை மலர்29 Oct 2021 6:15 AM GMT (Updated: 29 Oct 2021 7:23 AM GMT)
தீ புண்ணுக்கு இங்க், எண்ணெய் போன்றவற்றை உடனே போட வேண்டாம் என தீயணைப்புத்துறை அறிவுறுத்தியுள்ளது.
சென்னை:
தீபாவளியையொட்டி பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பது எப்படி என்பது பற்றி தீயணைப்பு துறை சார்பில் விளக்கம் அளித்து நோட்டீஸ்கள் பொதுமக்களுக்கும், மாணவ-மாணவிகளுக்கும் விநியோகிக்கப்பட்டுள்ளது.
மத்திய சென்னை மாவட்ட தீயணைப்பு அதிகாரி சரவணன் மற்றும் தீயணைப்பு வீரர்கள் இந்த நோட்டீசுகளை வெளியிட்டுள்ளனர். அதில் குறிப்பிடப்பட்டு இருப்பதாவது:-
தீபாவளியையொட்டி பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பது எப்படி என்பது பற்றி தீயணைப்பு துறை சார்பில் விளக்கம் அளித்து நோட்டீஸ்கள் பொதுமக்களுக்கும், மாணவ-மாணவிகளுக்கும் விநியோகிக்கப்பட்டுள்ளது.
மத்திய சென்னை மாவட்ட தீயணைப்பு அதிகாரி சரவணன் மற்றும் தீயணைப்பு வீரர்கள் இந்த நோட்டீசுகளை வெளியிட்டுள்ளனர். அதில் குறிப்பிடப்பட்டு இருப்பதாவது:-
* பெரியவர்களின் மேற்பார்வையில் சிறுவர்கள் பட்டாசுகளை வெடிக்க வேண்டும்.
* குடிசைகள் இல்லாத திறந்தவெளியில் பட்டாசு வெடியுங்கள்.
* பட்டாசை வெடிக்கும்போது இறுக்கமான ஆடைகளை அணிந்துகொள்ளுங்கள்.
* பெரிய வாளியில் தண்ணீரை நிரப்பி வைத்துக்கொள்ளுங்கள்.
* புஸ்வானம் கொளுத்தும்போது சமதரையில் வைத்து பக்கவாட்டில் நின்று கொள்ளுங்கள்.
* நீண்ட வத்திகளை கொண்டு பட்டாசுகளை தூரத்தில் நின்று வெடிக்க செய்யுங்கள்.
* தீ விபத்து ஏற்பட்டால் உடனே தண்ணீர் ஊற்றி அணையுங்கள். அல்லது கீழே படுத்து உருளுங்கள்.
* தீ புண்ணுக்கு இங்க், எண்ணெய் போன்றவற்றை உடனே போட வேண்டாம். அருகில் உள்ள டாக்டர்களிடம் சென்று காண்பியுங்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்... கேரளாவில் கனமழை நீடிப்பு: எருமேலியில் அடுத்தடுத்து நிலச்சரிவு- 10 வீடுகள் சேதம்
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X