search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச செயற்கை கால் அளவீடு முகாம் - திருப்பூரில் நாளை நடக்கிறது

    விண்ணப்பதாரர்களுக்கு தரமான செயற்கை அவயம் தயாரிக்கப்பட்டுள்ளது.
    திருப்பூர்:

    மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச செயற்கை கால் அளவீடு முகாம் திருப்பூரில் நாளை 29-ந்தேதி நடக்கிறது. திருப்பூர் குமரன் ரோட்டரி சங்கம், சக் ஷம் அமைப்பு சார்பில் கடந்த மாதம் செயற்கை கால் கேட்டு விண்ணப்பித்த நபர்களுக்கு அளவீடு முகாம் நடந்தது. 

    விண்ணப்பதாரர்களுக்கு தரமான செயற்கை அவயம் தயாரிக்கப்பட்டுள்ளது. செயற்கை அவயம் வழங்கும் நிகழ்ச்சியும், புதிய செயற்கை கால் தேவையானவருக்கு அளவீடு செய்யும் முகாமும் நாளை 29-ந்தேதி நடக்கிறது. 

    திருப்பூர் - மங்கலம் ரோடு குமரன் ரோட்டரி அரங்கில் காலை 10மணி முதல் முகாம் நடக்க உள்ளது. மேலும் விவரங்களுக்கு சக்ஷம் மாவட்ட தலைவர் ரத்தினசாமி (94422 25500), செயலாளர் தமிழ்செல்வன் (93630 32998) ஆகியோரை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. 
    Next Story
    ×