search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    மங்கலத்தில் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம் - நாளை நடக்கிறது

    முகாமில் பொதுமருத்துவம், இருதய நோய் சிகிச்சை, சர்க்கரை நோய் சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
    திருப்பூர்:

    தமிழக அரசின் வருமுன் காப்போம் திட்டத்தில் வட்டாரம் வாரியாக சிறப்பு மருத்துவ முகாம் நடந்து வருகிறது. அதன்படி மங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு உட்பட்ட அக்ரஹாரப்புத்தூரில் சிறப்பு மருத்துவ முகாம் நாளை 29-ந் தேதி நடக்க உள்ளது.

    முகாமில் பொது மருத்துவம், இருதய நோய் சிகிச்சை, சர்க்கரை நோய் சிகிச்சை, பல், காது, மூக்கு, தொண்டை, கண் சிகிச்சை, ரத்தம் மற்றும் சிறுநீர் பரிசோதனை, இ.சி.ஜி., மற்றும் ஸ்கேன் பரிசோதனை, தோல்நோய் மருத்துவம், பால்வினை நோய் பரிசோதனை உள்ளிட்ட சிகிச்சை மற்றும் பரிசோதனை முகாம் நடக்கிறது.
    Next Story
    ×