search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விஷம்
    X
    விஷம்

    கொட்டாம்பட்டி அருகே விஷம் குடித்து விவசாயி தற்கொலை

    கொட்டாம்பட்டி அருகே விஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கொட்டாம்பட்டி:

    கொட்டாம்பட்டி அருகே உள்ள வெள்ளினிப்பட்டியை சேர்ந்தவர் சேவுகப்பெருமாள்(வயது 64). விவசாயி. இவருக்கு வயிற்று வலி இருந்துள்ளது. அதற்காக சிகிச்சை பெற்று வந்துள்ளார். கடந்த 25-ந்தேதி தீராத வயிற்று வலி ஏற்பட்டதால் மனமுடைந்து பூச்சி மருந்தை குடித்துள்ளார். அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கொட்டாம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×