search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாநகராட்சி கமிஷனர் கிராந்திகுமார் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்த போது எடுத்தப்படம்.
    X
    மாநகராட்சி கமிஷனர் கிராந்திகுமார் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்த போது எடுத்தப்படம்.

    தனியார் நிறுவனங்கள் பொது இடங்களில் குப்பைகளை கொட்டினால் கடும் நடவடிக்கை - மாநகராட்சி ஆணையர் கிராந்திகுமார் எச்சரிக்கை

    பொதுமக்கள் குப்பைகளை மக்கும் மற்றும் மக்காத குப்பைகளாக தரம் பிரித்து வழங்க அறிவுரை வழங்கப்பட்டது.
    திருப்பூர்:

    திருப்பூர் மாநகராட்சி கமிஷனர் கிராந்தி குமார் இன்று காலை நான்காவது மண்டலத்துக்கு உட்பட்ட பாலாஜி நகர் பகுதியில் திடீரென ஆய்வு செய்தார். அப்போது அங்கு பொது இடங்களில் தனியார் நிறுவனங்கள் மூலம் குப்பைகளை கொட்டி வைக்கப்பட்டிருப்பது குறித்து அந்த பகுதியில் பொதுமக்களிடம் கேட்டறிந்தார். 

    இதனையடுத்து தனியார் நிறுவனங்கள் முறையாக குப்பைகளை வழங்க மாநகராட்சி மூலம் நோட்டீஸ் வழங்கவும் உத்தரவிட்டார். தொடர்ந்து பொது இடங்களில் தனியார் நிறுவனங்கள் குப்பை கொட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்தார். 

    மேலும், பொதுமக்கள் குப்பைகளை மக்கும் மற்றும் மக்காத குப்பைகளாக தரம் பிரித்து வழங்க அறிவுரை வழங்கினார். அதனைத் தொடர்ந்து இரண்டாவது மண்டலத்துக்கு உட்பட்ட உத்தமபாளையம் மாநகராட்சி பள்ளியில் மேற்கொள்ளப்பட உள்ள உட்கட்டமைப்பு பணிகளை பார்வையிட்டு  ஆய்வு மேற்கொண்டார்.
    Next Story
    ×