search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    புகையால் காற்று மாசு பணிக்கம்பட்டி கிராமத்தில் தென்னைமட்டை சப்ளைக்கு தடை

    தென்னை மட்டை கொண்டு வரும் வாகன உரிமையாளர்கள் சைசிங் நிறுவனங்களுக்கு தென்னை மட்டை சப்ளை செய்வதை தவிர்த்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
    திருப்பூர்:

    பல்லடம் ஒன்றியம் பணிக்கம்பட்டி கிராமத்தில் ஊர் பொதுமக்கள் சார்பில் பேனர் வைக்கப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

    பணிக்கம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்களில் செயல்பட்டு வரும் சைசிங் நிறுவனங்கள் காற்று மாசு ஏற்படுத்தும் தென்னை மட்டையை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். இது தொடர்பாக, ஊராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

    தென்னை மட்டை கொண்டு வரும் வாகன உரிமையாளர்கள் சைசிங் நிறுவனங்களுக்கு தென்னை மட்டை சப்ளை செய்வதை தவிர்த்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும். சைசிங் நிறுவனங்களில் தென்னை மட்டைகள் எரிக்கப்படுவதால் மிக அதிக அளவில் அடர்புகை ஏற்பட்டு சுவாசிக்க முடியாத அளவுக்கு காற்று மாசு ஏற்படுகிறது. 

    எனவே ஊராட்சியில் உள்ள கட்டுப்பாடுகளை மீறினால் வாகனங்கள் போலீசில் ஒப்படைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
    Next Story
    ×