என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
புகையால் காற்று மாசு பணிக்கம்பட்டி கிராமத்தில் தென்னைமட்டை சப்ளைக்கு தடை
Byமாலை மலர்27 Oct 2021 6:23 AM GMT (Updated: 27 Oct 2021 6:23 AM GMT)
தென்னை மட்டை கொண்டு வரும் வாகன உரிமையாளர்கள் சைசிங் நிறுவனங்களுக்கு தென்னை மட்டை சப்ளை செய்வதை தவிர்த்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
திருப்பூர்:
பல்லடம் ஒன்றியம் பணிக்கம்பட்டி கிராமத்தில் ஊர் பொதுமக்கள் சார்பில் பேனர் வைக்கப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
பணிக்கம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்களில் செயல்பட்டு வரும் சைசிங் நிறுவனங்கள் காற்று மாசு ஏற்படுத்தும் தென்னை மட்டையை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். இது தொடர்பாக, ஊராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தென்னை மட்டை கொண்டு வரும் வாகன உரிமையாளர்கள் சைசிங் நிறுவனங்களுக்கு தென்னை மட்டை சப்ளை செய்வதை தவிர்த்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும். சைசிங் நிறுவனங்களில் தென்னை மட்டைகள் எரிக்கப்படுவதால் மிக அதிக அளவில் அடர்புகை ஏற்பட்டு சுவாசிக்க முடியாத அளவுக்கு காற்று மாசு ஏற்படுகிறது.
எனவே ஊராட்சியில் உள்ள கட்டுப்பாடுகளை மீறினால் வாகனங்கள் போலீசில் ஒப்படைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X