என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பட்டா நிலத்தில் குடிசை அமைக்க முயன்ற 204 பேர் மீது வழக்கு
Byமாலை மலர்26 Oct 2021 7:40 AM GMT (Updated: 26 Oct 2021 7:40 AM GMT)
பஞ்சமி நிலம் எனக் கூறி நேற்று முன்தினம் சுமார் 200க்கும் மேற்பட்டோர் குடிசை போட முயன்றனர்.
பல்லடம்:
பல்லடம் அருகே உள்ள பொங்கலூர் ஒன்றியம் அலகுமலை கோவில் அடிவாரத்தில், தனியாருக்குச் சொந்தமான பட்டா நிலம் உள்ளது. இது பஞ்சமி நிலம் எனக்கூறி நேற்று முன்தினம் சுமார் 200க்கும் மேற்பட்டோர் குடிசை போட முயன்றனர்.
இதனை இடத்தின் உரிமையாளர்கள் எதிர்த்தனர். இரு தரப்புக்கும் மோதல் ஏற்படும் சூழ்நிலையில், பல்லடம் டி.எஸ்.பி வெற்றிச்செல்வன், திருப்பூர் தெற்கு தாசில்தார் ராஜ்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போகச் செய்தனர்.
இந்த நிலையில் தனியாரது பட்டா நிலத்தில், அத்துமீறி குடிசை அமைக்க முயன்றதாக மசநல்லாம்பாளையத்தை சேர்ந்த ராசு, மலைப்பாளையத்தை சேர்ந்த பழனிச்சாமி உள்ளிட்ட 204 பேர் மீது அவிநாசிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X