search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மேட்டூர் அணை
    X
    மேட்டூர் அணை

    மேட்டூர் அணை நீர்மட்டம் 101 அடியாக உயர்வு

    நடப்பாண்டில் 2-வது முறையாக மேட்டூர் அணை நீர்மட்டம் நேற்று பிற்பகல் 100 அடியை தாண்டியது.
    சேலம்:

    கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து தொடர்ந்து காவிரியில் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதற்கிடையே காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை தண்ணீரும் சேர்ந்து தமிழக -கர்நாடக எல்லையை கடந்து ஒகேனக்கல்லுக்கு வந்து கொண்டிருக்கிறது.

    ஒகேனக்கல்லில் நேற்று மாலை விநாடிக்கு 22 ஆயிரம் கன அடிக்கும் அதிகமாக தண்ணீர் வந்தது. இதனால் ஒகேனக்கல்லில் மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்பட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. ஒகேனக்கல்லில் வரும் தண்ணீர் நேராக மேட்டூர் அணைக்கு வருகிறது.

    மேட்டூர் அணைக்கு நேற்று 28 ஆயிரத்து 650 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் சரிந்து விநாடிக்கு 21 ஆயிரத்து 390 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து காவிரியில் 100 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. கால்வாயில் 550 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்ட நிலையில் இன்று காலை முதல் தண்ணீர் திறப்பு 450 கன அடியாக குறைக்கப்பட்டது.

    அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து மிகக் குறைந்த அளவே தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணை நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. நடப்பாண்டில் 2-வது முறையாக மேட்டூர் அணை நீர்மட்டம் நேற்று பிற்பகல் 100 அடியை தாண்டியது. இன்று மேலும் ஒரு அடி உயர்ந்து 101.5 அடியாக உயர்ந்தது.
    Next Story
    ×