search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்.
    X
    கோப்புபடம்.

    பல்லடம் அருகே மது விற்ற வாலிபர் கைது - 86 பாட்டில்கள் பறிமுதல்

    பல்லடம் அருகே உள்ள மாதம்புதூர் என்ற இடத்தில் டாஸ்மாக் கடைக்கு பின்புறம் உள்ள காட்டுப்பகுதியில் ஒருவர் சட்ட விரோதமாக மதுபானங்கள் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.
    பல்லடம்:

    பல்லடம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை நடைபெறுகிறதா? என பல்லடம் போலீசார் சோதனை மேற்கொண்டனர். 

    அப்போது பல்லடம் அருகே உள்ள மாதம்புதூர் என்ற இடத்தில் டாஸ்மாக் கடைக்கு பின்புறம் உள்ள காட்டுப்பகுதியில் ஒருவர் சட்ட விரோதமாக மதுபானங்கள் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. 

    இதையடுத்து அவரை சுற்றி வளைத்த போலீசார் அவரை பிடித்து விசாரணை செய்ததில் அவர் அதே பகுதியை சேர்ந்த செல்லத்துரை மகன் ராஜேந்திரன் (35) என்பதும், மதுபானங்களை வாங்கி வந்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்ததும் தெரிய வந்தது. 

    இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 86 மது பாட்டில்களையும், ரொக்கம் ரூ.1050 ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.
    Next Story
    ×