என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆண்டுக்கு ஒரு முறை பூக்கும் பிரம்ம கமலம் பூ பூத்தது
Byமாலை மலர்24 Oct 2021 8:41 AM GMT (Updated: 24 Oct 2021 8:41 AM GMT)
பவுர்ணமி சமயங்களில் இரவு நேரங்களில் மலர்ந்து அடுத்த நாள் வாடிப் போய்விடும் பிரம்ம கமலம் பூ.
பல்லடம்:
பிரம்மனின் நாடிக் கொடி என வர்ணிக்கப்படும் பிரம்மகமலம் பூவை நிஷா காந்தி பூ என்றும் அழைப்பார்கள், பிரம்மாவிற்கு படைக்கப்படும் பூ என்றும் அதனால் பிரம்ம கமலம் என்று பெயர் வந்தது என்றும் கூறுவார்கள். இந்தப் பூ ஆண்டுக்கு ஒரே ஒருமுறை மட்டும் மலரும்.
பவுர்ணமி சமயங்களில் இரவு நேரங்களில் மலர்ந்து அடுத்த நாள் வாடிப் போய்விடும். ஒரே ஒருநாள் மட்டும் தான் பூ மலர்ந்து இருக்கும் இந்தப் பூவின் நறுமணம் பூச்செடி உள்ளபகுதி முழுவதும் வீசும் தன்மை உடையது, இந்தநிலையில் பல்லடம் மங்கலம் ரோடு சுப்பையன் என்பவரது வீட்டில் இந்த பிரம்ம கமலம் பூ வளர்க்கப்பட்டு வந்தது.
அதில் பூக்கள் பூத்தன.வெளிர் வண்ணத்தில் நறுமணத்துடன் பூத்த பிரம்ம கமலம் பூக்களை அக்கம்பக்கத்தினர் ஆச்சரியத்துடன் வந்து பார்த்து செல்வதாக சுப்பையன்கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X