என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
டீசல் விலையை மத்திய அரசு நிர்ணயிக்க வேண்டும் - லாரி உரிமையாளர்கள் வலியுறுத்தல்
Byமாலை மலர்24 Oct 2021 6:32 AM GMT (Updated: 24 Oct 2021 6:32 AM GMT)
6 மாதத்துக்குள் லிட்டருக்கு ரூ.15க்கு டீசல் விலை உயர்ந்துள்ளது. தொடர் டீசல் விலை உயர்வு லாரி தொழிலில் உள்ளவர்களை கடுமையாக பாதித்துள்ளது.
திருப்பூர்:
நடப்பாண்டு ஏப்ரல் மாதம் லிட்டர் ரூ.86.57ஆக இருந்த டீசல் விலை ஜூலை ரூ.94.35,ஆகஸ்டு 95.32 ஆகவும் உயர்ந்தது. ஒரு வாரமாக தொடர்ந்து டீசல் விலை உயர்ந்து நேற்று முன்தினம் லிட்டர் 100.08 ஆக உயர்ந்தது. இதனால் லாரி உரிமையாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.
இதுகுறித்து திருப்பூர் மாவட்ட லாரி உரிமையாளர் சங்க தலைவர் சின்னசாமி கூறியதாவது:
6 மாதத்துக்குள் லிட்டருக்கு ரூ.15க்கு டீசல் விலை உயர்ந்துள்ளது. தொடர் டீசல் விலை உயர்வு லாரி தொழிலில் உள்ளவர்களை கடுமையாக பாதித்துள்ளது. பெட்ரோல், டீசல் விலையை ஜி.எஸ்.டி., வரம்புக்குள் கொண்டு வர வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். மத்திய அரசு செவிசாய்க்கவில்லை.
ரூ.42 ஆயிரத்து 300ஆக இருந்த லாரி டயர் விலை தற்போது ரூ.46 ஆயிரத்து 200ஆக உயர்ந்துள்ளது. இப்போது டீசல் ரூ.100ஐ தாண்டிவிட்டது. டீசல் விலையை, எண்ணெய் நிறுவனங்களுக்கு பதில் மத்திய அரசு நிர்ணயிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X