search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்து பலி
    X
    விபத்து பலி

    அரசு பஸ் மோதி நிதி நிறுவன ஊழியர் பலி

    அரசு பஸ் மோதி நிதி நிறுவன ஊழியர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    துவரங்குறிச்சி:

    திருச்சி மாவட்டம் மணப்பாறை சேதுரத்தினபுரத்தைச் சேர்ந்தவர் தினேஷ் குமார் (வயது 31). இவர் தனியார் நிதி நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். நேற்று இவர் மணப்பாறை-திண்டுக்கல் சாலையில் உள்ள ரெயில்வே மேம்பாலம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக வந்த அரசு பஸ் தினேஷ்குமார் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து மணப்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×