என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருப்பூரில் எல்லை விரிவாக்கம் குறித்த கருத்து கேட்பு கூட்டம்
Byமாலை மலர்23 Oct 2021 10:07 AM GMT (Updated: 23 Oct 2021 10:08 AM GMT)
கருத்து கேட்பு கூட்டத்தில் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த பல்வேறு தொழில் அமைப்புகள், அரசியல் கட்சிகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் திருப்பூர் முழுமை திட்ட எல்லை விரிவாக்கம் குறித்த கருத்து கேட்பு கூட்டம் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை முதன்மை செயலாளர் ஹித்தேஸ்குமார் எஸ்.மக்வானா தலைமையில் நடைபெற்றது.
இதில் திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் ,மாநகராட்சி ஆணையாளர் கிராந்தி குமார், நகர் ஊரமைப்பு இயக்குனர் சரவணவேல்ராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் திருப்பூர் மாவட்டத்தில் மேம்படுத்த வேண்டிய பணிகள், போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக சாலை விரிவாக்கப்பணிகள் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது .
இந்த கருத்து கேட்பு கூட்டத்தில் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த பல்வேறு தொழில் அமைப்புகள், அரசியல் கட்சிகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர்.
ஆலோசனைகளை கேட்டுக் கொண்ட முதன்மை செயலர் அவை குறித்து பரிசீலிக்கப்படும் என தெரிவித்து மாவட்டத்தின் வளர்ச்சிக்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X