என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பல்லடம் அருகே டெய்லர் வீட்டில் திருடிய வாலிபர் - பொதுமக்கள் மடக்கி பிடித்தனர்
Byமாலை மலர்23 Oct 2021 7:47 AM GMT (Updated: 23 Oct 2021 7:47 AM GMT)
வீடு திரும்பிய போது வீட்டின் கதவு திறந்திருந்தது. அவர்கள் வரும் சத்தம் கேட்டு உள்ளே இருந்து ஒரு வாலிபர் வெளியே வந்தார்.
பல்லடம்:
பல்லடம் அருகே உள்ள பொங்கலூர் ஒன்றியம் பெருந்தொழுவில் டெய்லர் கடை நடத்தி வருபவர் மணி (வயது 55). இவரது மனைவி ராணி. நேற்று மாலை வேலைக்கு சென்ற ராணியை அழைத்து வருவதற்காக வீட்டைப் பூட்டிவிட்டு மணி சென்றார்.
பின்னர் வீடு திரும்பிய போது வீட்டின் கதவு திறந்திருந்தது. அவர்கள் வரும் சத்தம் கேட்டு உள்ளே இருந்து ஒரு வாலிபர் வெளியே வந்தார்.
உடனே கணவன் மனைவி இருவரும் திருடன் திருடன் என சத்தம் போட்டனர். உடனே அங்கிருந்த பொதுமக்கள் தப்பி ஓடிய வாலிபரை பிடித்து அங்கிருந்த மின்கம்பத்தில் கட்டி வைத்தனர்.
இதுகுறித்து அவிநாசிபாளையம் போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவரை விசாரணை செய்தபோது, திருப்பூரை சேர்ந்த இஸ்மாயில் (32) என்பதும், மணி வெளியே சென்றவுடன் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று ஒரு பவுன் கம்மல், ரூ. 3 ஆயிரம் பணத்தை திருடிக்கொண்டு தப்ப முயற்சி செய்தது தெரியவந்தது.
இதையடுத்து அவரை கைது செய்து பணம் மற்றும் நகையை போலீசார் பறிமுதல் செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X